பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் நீராடிய குளத்தின் அதிசயம் தெரியுமா? 365 டேஸ் வொண்டர்!
பத்தினம்திட்டா: பந்தளம் அரண்மனையில் சுவாமி ஐயப்பன் நீராடிய குளத்தின் அதிசயம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஐயப்பன் என்றாலே அதிசயம்தானே! புலிபால் கொண்டு வர சென்று புலி கூட்டங்களுடன் வந்தது என எத்தனையோ அதிசயங்களை அவர் நிகழ்த்தினாரே!
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடைத் திறந்திருக்கும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இருமுடி அணிந்து கொண்டு வனப்பகுதி வழியாக வரும் பக்தர்களை ஐயப்பன் காக்கிறார்.

இதுகுறித்து World of Priyalakshmanan என்ற இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது: பந்தளம் அரண்மனையில் சுவாமி ஐயப்பன் நீராடிய குளத்தின் அதிசயம் என்ன தெரியுமா? சுவாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனையில் அவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.
அதை அரண்மனை நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு சுவாமி ஐயப்பன் நீராடிய குளம் இருக்கிறது. பொதுவாக கார்த்திகை, மார்கழி உள்ளிட்ட மாதங்களில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஜில்லென இருக்கும். ஆனால் சுவாமி ஐயப்பன் நீராடிய இந்த குளத்தில் உள்ள நீர் வருஷத்தில் 365 நாட்களும் வெதுவெதுவாகவே இருக்கும்.
பந்தள அரண்மனைக்கு போனால் இந்த குளத்தை பார்க்கலாம். ஐயப்பன் வில்வித்தை பயின்ற குருகுலம் பந்தள அரண்மனையில் இருந்து ஒன்றரை தூரத்தில் உள்ள குருநாதன் முகடி ஆகும்.












Click it and Unblock the Notifications