இந்த 8 பொருளை உடனே தூக்கி எறியுங்க.. வீட்டில் மகிழ்ச்சி, பணம், நன்மைகள் தர உதவும் செம வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் சில பொருட்களை சரியாக வைத்திருந்தாலே, வறுமை அண்டாது என்பார்கள்.. அதேபோல, தரித்திரம் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை வீட்டிற்குள் சேர்த்து வைக்காமல் இருந்தாலும், வறுமை அண்டாது. இதுகுறித்து முன்னோர்கள் பல குறிப்புகளை சொல்லி வைத்திருக்கிறார்கள்.. அதை சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே, கிழிந்த ஆடைகளை வீட்டில் வைத்திருக்க கூடாது.. உடுத்தும் ஆடைகளையும் கிழிசல் ஆடைகளை பயன்படுத்தக்கூடாது.. பழைய ஆடைகள் பொதுவாக சுருங்கிவிடும்.. இந்த சுருங்கி போன ஆடைகளையும், அணியக்கூடாது, இவையெல்லாம் குடும்பத்தில் தரித்திரத்தை உண்டுபண்ணிவிடும்.

இரும்பு: அதேபோல, வீட்டின் சாவி, பூட்டுகள், தாழ்ப்பாள், இரும்பு கேட் இவையெல்லாம் துருப்பிடிக்கும் அளவுக்கு விடக்கூடாது.. மாதம் ஒருமுறை, இவைகளை சுத்தப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும்.. இரும்பு கேட், தாழ்ப்பாள் பகுதிகளில் 2 சொட்டு எண்ணெய் விட்டு வரலாம். அதாவது எப்போதுமே பயன்படுத்தும்படியாகவே இவையெல்லாம் இருக்க வேண்டும். காரணம், இரும்பு என்பது சனி பகவானுக்கு உரியது. அதனால், வீட்டில் எங்குமே இரும்பு பொருட்களை பயன்படுத்தாமலும், பழுதடைந்தும் போட்டு வைக்ககூடாது.
அதேபோல, ஒரே செருப்பை நீண்ட காலத்துக்கு பயன்படுத்தக்கூடாது.. ஓரளவு நன்றாக செருப்பாக இருந்தாலும், அவைகளை மாற்றிவிடுவது நல்லது. முக்கியமாக, நாம் பயன்படுத்தும் செருப்புகள் தேயக்கூடாது.. அதேபோல, பயன்படுத்தாத செருப்பு, ஷூக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது.. புது செருப்புகளே என்றாலும், அதை பயன்படுத்தாவிட்டால், உடனே வெளியே வீசிவிட வேண்டும்.
பீங்கான்: மிதியடிகள் எப்போதுமே தூய்மையாக இருக்க வேண்டும். கிழிந்த மிதியடியை நுழைவுவாயிலில் போட்டு வைக்கக்கூடாது.. இந்த காலடிகளை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். வீட்டில் உடைந்த கண்ணாடி இருக்கக்கூடாது.. பீங்கான் பொருட்கள் உடைந்திருந்தாலும், விரிசல் விட்டிருந்தாலும் அதையும் தூக்கி எறிந்துவிட வேண்டும்.
மாடியில், பயன்படுத்தாத சேர்கள், நாற்காலிகள் போட்டு வைத்திருக்கக்கூடாது.. இவைகளையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும். சாதம் வடிக்கும் தட்டு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வளைந்து நெளிந்த தட்டுகளை உபயோகிக்ககூடாது. அதேபோல, அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை வீட்டிற்குள் அடைத்து வைக்கக்கூடாது.. பழைய கடிகாரங்கள், பயன்படுத்தாத கடிகாரங்கள், போன்றவையும் வைத்திருக்கக்கூடாது.. அப்படி வைத்திருந்தால், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்..
உலோக கம்பிகள்: அதேபோல, சிலர் வீடு கட்டிமுடித்ததுமே, மீதமான கம்பங்கள், மூங்கில்களை மொட்டை மாடியில் போட்டு வைத்திருப்பார்கள்.. இதனால் வீட்டில் தகராறு ஏற்படும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. உலோகப் பொருட்கள், கம்பிகள், கருவிகள், உடைந்த மண் பாத்திரங்கள் எதுவுமே வைத்திருக்கக் கூடாது.. வீட்டின் மொட்டைமாடி சனி பகவானின் காரணியாக கருதப்படுவதால், மாடியை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications