தங்கம் வாங்க நல்ல நேரம்..தெரியாமல் கூட இந்த நேரத்தில் நகையை அடகு வைக்காதீர்கள்..கடன் தீர டிப்ஸ்
சென்னை: ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தொடங்கும் செயல்கள் வெற்றிகரமாக கைகூடி வரும். நாம் தங்க நகைகள் வாங்கும் நேரம் நல்ல நேரமாக இருந்தால் மேலும் மேலும் பெருகும். தங்க நகை அடகுக்கு போகாமல் வீட்டிலேயே தங்கும். அதே போல கடனை அடைக்கும் போதும் அதற்கான நேரம் பார்த்து பணத்தை திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் அடையும். அது எந்த நேரம் என்று பார்க்கலாம்.
ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ! அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யப்படமாட்டாது. இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்.

குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது. சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான். அதனால் தான் குளிகை என்ற பெயர் வந்தது. இந்த நேரத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப பன்மடங்காக வளரும் என்பது நம்பிக்கையாகும்.
எந்த ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ! அந்த செயலை குளிகை நேரத்தில் நீங்கள் துவங்கினால் நினைத்தது வெற்றியடையும். எந்த செயல் திரும்ப திரும்ப நடைபெறக் கூடாது என்று நினைக்கிறோமோ அந்த செயலை குளிகை நேரத்தில் கட்டாயம் செய்யவே கூடாது.
குளிகை நேரத்தில் தங்க நகையை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, இறந்தவர்களின் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த விஷயங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
குளிகை நேரத்தில் நாம் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை மகிழ்ச்சியை தராது விவாகரத்து ஏற்பட்டு பிரிய நேரிடலாம். மீண்டும் திருமணம் செய்யும் நிலை வரலாம். இதனால்தான் குளிகை நேரத்தில் திருமணம் செய்வது தவிர்க்கப்படுகின்றன.
குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் கடனை திரும்ப கொடுக்கலாம். நாம் திரும்ப கொடுக்கும் கடன் உங்களுக்கு பணவரவு அதிகம் உண்டாகி கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும். அந்த அளவிற்கு குளிகை நேரம் அதிர்ஷ்டகரமான நேரமாகும்.

குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது. பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகை நேரத்தில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிகப்பு பட்டு துணியை விரித்து அதில் பணத்தை போட்டு வைக்கவும். யாரும் அடிக்கடி பார்க்காத இடத்தில் இந்த கண்ணாடி கிண்ணத்தை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம்.
குளிகை நேரத்தில் சேமித்து கொண்டே வரும் பணத்தை தினசரி செலவிற்கு எடுக்கக் கூடாது. நீங்கள் சேமித்த இந்த பணத்தை கொண்டு நல்ல விஷயங்கள் செய்யலாம். வீடு கட்ட, தொழில் துவங்க, நிலம் வாங்க இந்த பணத்தை பயன்படுத்தினால் காரியத் தடையின்றி நடைபெறும். அதே நேரத்தில் வரப்போகும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் குளிகை நேரமாக பார்த்து வாங்கலாம். குரு, சுக்கிர ஓரை பார்த்தும் வாங்கலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications