Mahalaya Amavasya 2025: மகாளய அமாவாசை என்றால் என்ன? புரட்டாசி மாதத்தில் வருவதற்கு என்ன சிறப்பு?
சென்னை: இன்று மகாளய அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். இந்த அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்களின் ஆசியை பெறலாம். இப்படிப்பட்ட மகாளய அமாவாசை என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் "மகாளய பட்சம்" என அழைக்கப்படுகிறது. இந்த மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

இந்த 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தினரை காண பூமிக்கு வருவதாக சொல்வதுண்டு.
எனவேதான் ஒவ்வொரு ஆண்டும் முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டு திதி கொடுத்து வருகிறோம். இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை செய்ய வேண்டும்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் அதில் முக்கியமானது ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைதான். இந்த மகாளய பட்சமான 15 நாட்களில் நம் முன்னோர்கள் திதி வந்தால் அன்றைய தினம் காக்கைக்கு உணவு வைப்பது நல்லது. எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், மறந்தவர்கள், இந்த மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த அமாவாசையில் காலை 6 மணி முதல் 12.30 மணி வரை திதி கொடுக்கலாம்.
பொதுவாக திதி, தர்ப்பணம் என்றாலே காலை வேளைகளில் கொடுப்பது சரியாக இருக்கும். இறந்தவர்களின் படங்களை துடைத்து, மஞ்சள் குங்குமமிட்டு, பூமாலை போட்டு படையலிட்டு வழிபடலாம்.
பித்ருக்கள் வழிபாடு என்றாலே கருப்பு எள்ளும் தர்ப்பையும்தான் முக்கியம். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரையும் இரைத்து வழிபடுவதுண்டு. நீர் நிலைகளிலோ அல்லது வீடுகளிலோ திதி கொடுக்கலாம். உணவு தானம் செய்வது நல்லது. பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பதும் பசு வழிபாடும் முக்கியமானதாகும்.
மகாளய அமாவாசை வழிபாட்டால் தலைமுறை தலைமுறையாக இருந்த அனைத்து தடைகளும் நீங்கும். இதனால் திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம், தொட்ட காரியங்கள் நிறைவேறுவது என அனைத்தும் நடைபெறும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications