ரத சப்தமி.. திருமலையில் மலையப்பசுவாமி வீதி உலா.. திருச்சானூரில் 7 வாகனங்களில் உலா வந்த பத்மாவதி
திருப்பதி: ரத சப்தமி விழா இன்றைய தினம் திருமலை திருப்பதியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி வீதி உலா வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருச்சானூரிலும் ரத சப்தமியை முன்னிட்டு பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்தார்.
சூரியபகவான் தை மாதம் தனது வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். சூரிய ஜெயந்தி விழா ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ரத சப்தமியை முன்னிட்டு திருமலையில் உற்சவர் மலையப்ப சுவாமி காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். காலை 9 முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 முதல் 2 வரை அனுமந்த வாகனத்திலும் உலா வருவார். பகல் 2 முதல் 3 வரை சக்கர ஸ்நானமும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பவிருட்ச வாகனத்திலும் உலா வருவார் மலையப்பசுவாமி.
மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், கடைசியாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் மலையப்பசுவாமி. ரத சப்தமியை முன்னிட்டு நேற்றைய தினம் முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக விஐபி தரிசனம் தவிர, மற்ற விருப்ப தரிசனங்களான மூத்த குடிமக்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான தரிசனம் ஆகியவை இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் பிரம்மோற்சவ வைபவமான ரதசபதமியை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏகாந்தத்தின் போது நடைபெற உள்ளன. ரதசப்தமியை முன்னிட்டு திருமலை கோவில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது.
திருமலையைப் போல திருச்சானூரிலும் இன்றைய தினம் ரத சப்தமி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வரும் பத்மாவதி தயாரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications