Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலையில் கூட்டம் குவிந்தும் வருமானம் குறைவுதானாம்.. தேவசம்போர்டு சொன்ன புள்ளி விபரம்

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: ஐயப்பனை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலையில் வருமானம் குறைவாகவே இருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 28 நாட்களில் ரூ.134,44,90,495 கோடி வசூலானது. இது முந்தைய ஆண்டில் ரூ.154 கோடியாக இருந்தது. இதுவரை 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 1.5 லட்சம் பக்தர்கள் குறைவாகவே உள்ளதாக தெரியவந்துள்ளது.

Sabarimala earns Rs 134 crore in 28 days, marginally lower than last years Rs 154 crore says Report

அரவணா பிரசாதம் 61.91 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.73.75 கோடியாக இருந்தது. அரவணா படத்தில் மட்டும் ரூ.11.84 கோடி விற்பனை குறைந்துள்ளது. அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.8.99 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த முறை ரூ.9.43 கோடியாக இருந்தது. அப்பம் விற்றுமுதல் வித்தியாசம் 44.49 லட்சம் ரூபாய் ஆக உள்ளது.

சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மூலம் உண்டியல் காணிக்கையாக ரூ.41.80 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.46,452 கோடி வருவாய் இருந்தது. 4.65 கோடி வருமானம் குறைந்துள்ளது என்று தேவசம்போர்டு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சபரிமலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகவும், பந்தளம் வலிய கோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலுக்குச் சென்று விட்டு ஏராளமானோர் வீடுகளுக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூட்டம் அதிகமாக இருந்ததால் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் பக்தர்கள் பந்தளத்தில் இருந்து திரும்பி வருவதாக செய்திகள் வெளியாகின.

விரதம் இருந்து யாத்திரை சென்ற ஐயப்பபக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து, விலையுயர்ந்த மாலையை கோவிலில் இருந்து அகற்றிவிட்டு, பந்தளத்தில் இருந்தே தரிசனம் பெறாமல் மணிக்கணக்கில் காத்திருந்துவிட்டு திரும்புகின்றனர். சன்னிதானம் செல்ல முடியாமல் தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் பந்தளத்தில் இருந்து திரும்பி சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+