ஓம் சக்தி பராசக்தி! சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரை திருத்தேரோட்டம்
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு சிறப்புடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன் வையாளி கண்டருளினாா்.
விழாவில் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கருவறையில் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா், உற்சவ அம்பாளுக்கும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருத்தேரில் அம்மன் எழுந்தருளிய பின்னா், காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் ஒலிக்க அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல பக்தர்கள் ஓம்சக்தி.. பராசக்தி.. என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.
சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பால்குடம், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்திக் கொண்டும் வந்தார்கள். பக்தா்கள் கொண்டு வரும் பாலை ஊற்றுவதற்கும், அக்னிசட்டி வழிபாடு நடத்துவதற்கும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் பல்வேறு ஊா்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. வெங்கங்குடி சாலை, பனமங்கலம் சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து, அங்கு பேருந்துகளை நிறுத்தி, பக்தா்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பக்தா்கள் அதிகளவில் குவிந்து வருவதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண் குமாா் தலைமையிலான போலீஸாா் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேலும் சாதாரண உடையிலும் குற்றப்பிரிவு போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
ஏப். 19-இல் தெப்ப உற்சவம்: திருவிழாவில் ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளிக் காமதேனு, 18ஆம் தேதி முத்துப் பல்லக்கு, 19ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறும். ஏப்ரல் 22-ஆம் தேதி தங்கக்கமல வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறும். சித்திரைப் பெருந்திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் கல்யாணி மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஏலக்காய்–கிராம்பு மாலை வழிபாடு: மகாலட்சுமி அருளைப் பெறும் எளிய பரிகாரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications