Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிக்கிழமையின் ஸ்பெஷாலிட்டீஸ்.. தாலி சரடு மாத்தணுமா? சனிக்கிழமைகளில் இதெல்லாம் செய்யாதீங்க: ஆன்மீகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிக்கிழமைகள் என்றாலே முக்கியத்துவம் நிறைந்த நாட்களாகும்.. சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சில வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

ஒவ்வொரு கிழமைகளிலும், ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.. அதேபோல, சில பொருட்களை, குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கினாலும் துரதிருஷ்டம் சேர்ந்துவிடும். அந்தவகையில், சனிக்கிழமையில் வாங்க கூடாத பொருட்களை என்னென்னவென்று பார்ப்போம்.

spirituality thali saradu saturdays

சனிக்கிழமைகள்: இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள் என்பதால், சனிக்கிழமைகளில், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது.... இரும்பு மட்டுமல்லாமல், கூர்மையான பொருட்கள், ஆயுதங்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது.. ஆனால், கோயில்களுக்கு இரும்பு பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கி தரலாம்..

சமையலுக்கு தேவைப்படும் மாவு, உப்பு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது.. அதேபோல, வீட்டிலிருந்தும் பிறருக்கு உப்பு வாங்கவோ, காரம் கொடுக்கவோ கூடாது.. இது மேலும் கடனை அதிகரித்துவிடும்.

புத்தாடைகள்: தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாமே தவிர, சனிக்கிழமைகளில் எண்ணெய்யும் வாங்க கூடாது.. புதிய ஆடைகளை வாங்கவும் கூடாது, அணியவும் கூடாது. சனிக்கிழமைகளில் தங்க நகை வாங்கலாம், அணிந்தும் கொள்ளலாம்.. வெள்ளிக்கிழமைகள், உகாதி பண்டிகை, அட்சய திருதி, நவராத்திரி பண்டிகை காலங்களிலும் நல்ல நேரம் பார்த்து தங்கம் வாங்கலாம். அதுபோலவே வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது.

அதேபோல, தாலி கயிறு மங்களகரமான நாளில் மட்டுமே மாற்ற வேண்டும்.. ஆனால் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் தாலி கயிறு மாற்றக்கூடாது..

அவமதிப்பு: எப்போதுமே, சனிக்கிழமையன்று சுத்தமான காலணி அல்லது செருப்புகளை தானம் செய்யலாம்.. இதனால், சனி தோஷங்கள் நீங்கும்.. ஆனால் காலணிகள், செருப்புகளை பரிசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.. எந்த உயிரினங்களுக்கு தீங்கு இழைக்காமல், சனிக்கிழமைகளில் ஆதரவற்றவர்கள், ஏழைகள் அல்லது முதியவர்கள் யாரையும் தவறுதலாக அவமதிக்காமல் இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அதேபோல, சனிக்கிழமைகளில் அசைவ உணவை உண்பது மிகவும் அமங்கலமாக கருதப்படுகிறது. இந்த நாளில், சனி பகவான் அசைவ உணவை சாப்பிடுபவர்கள் அல்லது சமைப்பவர்களை தண்டிப்பாராம்.. அதேபோல, சனிக்கிழமைகளில் மது அருந்தக் கூடாது... சனிக்கிழமை அன்று முடி, தாடி அல்லது நகங்களை வெட்ட கூடாது. இதுவும், எதிர்மறையான தாக்கத்தை வாழ்க்கையில் ஏற்படுத்து விடும்.. சனி தோஷமும் இந்த செயல்களால் ஏற்படுவதால், இவைகளை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+