திருச்சானூர் பத்மாவதி தாயார் தெப்ப உற்சவம்..ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவ விழா இன்று தொடங்கி ஜூன் 04 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வருடாந்திர தெப்போற்சவம் நடக்கும் இந்த ஐந்து நாட்களும் திருச்சானூரில் வழக்கமாக நடக்கும் ஆர்ஜித கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் இன்று மே 31ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 4ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது.
இதே போல திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வாகிக்கப்பட்டு வரும் கோவில்களில் நாராயண வனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த தலத்தில் தான் ஸ்ரீநிவாசப் பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து திருமலைக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நாராயணவனமே ஆகாச ராஜனின் தலைநகராக இருந்ததாகவும், இங்கேயே தனது மகள் பத்மாவதியின் திருமண ஏற்பாடுகளை அவர் செய்தாகவும் சொல்லப்படுகிறது. அவர் பத்மாவதிக்காக சீதனமாக கொடுத்த திருச்சானூர் அவருக்குரிய கோவிலாகவும், திருப்பதி ஏழுமலையான் திருமலையிலும் கோவில் கொண்டதாக சொல்லப்படுகிறது.
கி.பி1541 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில் பல முறை விரிவாக்கம் செய்து கட்டப்பட்டுள்ளது. நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ பெருமாள் கோவில், கல்யாண வரமருளும் கோவிலாகவும், புதிதாக கல்யாணம் ஆனவர்களின் வாழ்வில் ஒற்றுமையை தரக் கோவிலாக விளங்குகிறது.
திருப்பதியில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் ஜூன் 08ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவம் துவங்குவதற்கு முன்தைய நிகழ்வான கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மே 24 ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்க உள்ளது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 01 - சின்ன சேஷ வாகனம்
ஜூன் 02 - சிம்ம வாகனம்
ஜூன் 03 - கற்பவிருட்ச வாகனம்
ஜூன் 04 - மோகினி அவதாரம்
ஜூன் 05 - அனுமந்த வாகனம், மாலையில் வசந்தோற்சவம்
ஜூன் 06 - சூர்ய பிரபை வாகனம்
ஜூன் 07 - ரதோற்சவம்
ஜூன் 08 - சக்ர ஸ்நானம்
விடுமுறை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்சானூரில் வருடாந்திர தெப்போற்சவம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளதால் இனி திருச்சானூரிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாராயண வனத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications