Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநங்கைகள் கட்டாய பண வசூல்? காசு கொடுத்தால்தான் நகர முடியும்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களை மடக்கும் சில திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த பணத்தை கொடுத்தால்தான் அவர்களை அந்த இடத்தை விட்டே நகர வைக்கிறார்கள் என்பது குறித்த வீடியோவை போலீஸுக்கு புகாராக அளித்துள்ளார்கள்.

திருவண்ணாமலைக்கு பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். சுமார் 14 கி.மீ. தூரம் கொண்ட இந்த மலையை வலம் வருவதன் மூலம் சிவனின் அருளை பெறலாம் என்பது ஐதீகம். இதற்காக மாதாமாதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

spirtuality thiruvannamalai police

கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வருகிறார்கள். அவ்வாறு கிரிவலம் வருவோரை திருநங்கைகள் காசு கேட்டு தொல்லை செய்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.

இதுகுறித்து ஒரு வீடியோவில் பதிவான காட்சிகளில் என்ன இருக்கிறது என்றால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். அவர்களை ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திருநங்கைகள் மடக்குகிறார்கள். அவர்களிடம் காசு கேட்கிறார்கள். அவர்கள் கொடுத்துவிட்டால் ஆசிர்வாதம் செய்து விட்டுவிடுகிறார்கள்.

இல்லாவிட்டால் அவர்கள் முன்னேறி சென்றால் ஓடி போய் அவர்களை வழிமறிக்கிறார்கள். சரி வலது பக்கம் , இடது பக்கம் செல்லலாம் என்றாலும் அவர்களை விடாமல் வழிமறிக்கிறார்கள். காசை பர்ஸில் இருந்து பறிக்காத குறையாக திருநங்கைகள் நடந்து கொள்கிறார்கள். அந்த வீடியோவில் 3 திருநங்கைகள் இப்படி செய்கிறார்கள்.

அது போல் ஆண்களையும் அவர்கள் மடக்கி காசு கேட்கிறார்கள். கொடுக்காவிட்டாலும் விடாமல் துரத்தி மடக்கி எப்படியாவது காசை வாங்கி விடுகிறார்கள். சில நேரங்களில் அவர்களை ஆபாசமாக திட்டியும் விடுகிறார்கள். பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் செய்வதாக கூறி அவர்கள் மீது ஹார்ஷாக நடந்து கொள்கிறார்கள்.

இந்த வீடியோவிலேயே ஒரு குழந்தை தலையை தேய்த்துவிட்டபடியே தலையில் கை வைத்து கொண்டிருக்கும். ஒரு வேளை சில்லறை இல்லை என்று சொன்னாலும் "சரி காசை கொடு , நான் சில்லறை கொடுக்கிறேன்" என கூறி சில்லறையை கொடுக்கிறார்கள். அதிலும் குறைந்த ரூபாயை கொடுத்தாலும் திட்டுகிறார்கள்.

குறைந்தது 10 ரூபாய் கொடுத்தால்தான் விடுகிறார்கள். அதிலும் பெண்களிடம் நெருங்கி வந்து அவர்கள் காசு கேட்பதால் சங்கோஜத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநங்கைகள் தற்போது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி வருகிறார்கள். ஒருவர் நல்ல நிலையில் இருந்தால் மற்ற திருநங்கைகளை தூக்கிவிடுகிறார்கள். இதற்காக எத்தனை அறக்கட்டளைகளை திருநங்கைகளே சேர்ந்து நடத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளையும் வாங்கி தருகிறார்கள். கல்விக்காக பலர் உதவி செய்கிறார்கள். இதன் மூலம் இன்று எத்தனையோ பேர் காவல் துறையிலும் மருத்துவத் துறையிலும், கல்வித் துறையிலும் சாதித்து வருகிறார்கள். எனவே காசு கேட்கும் திருநங்கைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்வில் வலம் பெற தொண்டு நிறுவனங்கள் உதவி புரிந்தால் நலமாக இருக்கும். அவர்களும் ஒரு ஜான் வயிற்றுக்காக கையை ஏந்தும் நிலை இல்லாமல் அவரை போன்ற திருநங்கைகளை கை கொடுத்து தூக்கிவிடும் நிலைக்கு உயரக் கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+