தங்கத்தை கல் உப்புக்குள் வைத்து எடுத்தால் என்னாகும்? புதிய உடையில் மஞ்சள் தடவி அணிவது ஏன் தெரியுமா?
சென்னை: பொதுவாக ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும், பின்னணியில் ஏதாவது ஒரு காரணங்கள் இருக்கும்.. அதிலும் அறிவியல் காரணங்கள் நிறையவே இருக்கலாம்.. அதனால்தான், நம்முடைய முன்னோர்கள், சம்பிரதாயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தனர்.. அதில் ஒன்றுதான் புதிய ஆடையில் மஞ்சள் தடவி , அதற்கு பிறகே அந்த ஆடையை பயன்படுத்துவர்.. புத்தாடையில் மஞ்சள் தடவ என்ன காரணம்? தங்கம் வாங்கியதுமே கல் உப்பில் புதைத்து வைக்க என்ன காரணம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நாம் கடைகளில் வாங்கும் ஆடைகளில், பெரியவர்கள் மஞ்சள் தடவி தந்து, உடுத்த சொல்வார்கள்.. ஏனென்றால், கடைகளில் அந்த உடையை நீங்கள் வாங்குவதற்கு முன்பு, வேறு யாராவது அந்த ஆடையை பார்த்துவிட்டு சென்றிருக்கலாம்.. அவர்களுடைய எண்ண அலைகள் முழுக்க அந்த ஆடைகளில் மட்டுமே படிந்திருக்கும்.

அதை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்ப அலைகளைச் சுடர்விட செய்வதற்காகவே புதிய ஆடைகளில் மஞ்சள் வைப்பார்கள். மஞ்சளுக்கு தனி மகிமை உண்டு.. என்பது மங்களமான பொருளாக கருதப்படுகிறது. தோஷத்தை நீக்கும் அற்புத மூலிகையாக மஞ்சள் உள்ளதால், அதனை புத்தாடையில் தடவி தோஷத்தை நீக்குகிறார்கள்.
பொறாமை - திருஷ்டி
அதேபோல, அந்த ஆடையை அணியும்போது, பலரது பொறாமை கண்கள் உங்கள் மீது விழக்கூடும்.. அந்த பொறாமை கண்ணிலிருந்தும் மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நம்பிக்கையாகும்.. மஞ்சள் மிகச்சிறந்த ஆண்டிபயாடிக் மருந்து என்பதால், ஆடைகளில் உள்ள கிருமிகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
புத்தாடை என்பது கஞ்சி போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டது.. அதன்மீது மஞ்சளை தடவும்போது, தீயவை எதுவும் நெருங்காது.
கல் உப்பில் தங்க நகை
அதேபோல, நீங்கள் வாங்கும் தங்கத்தை ஒரு சுத்தமான துணியில் கட்டி, உப்புக்குள் ஒரு நாள் முழுக்க முழுவதும் புதைத்து வைத்திருக்க வேண்டும். அதனால் தங்கத்தின் மீது இருக்கின்ற தோஷங்களும் முழுக்க விலகி விடுவதுடன், உங்களிடம் இருக்கும் தங்கம் பெருகிக் கொண்டே போகும் என்பது நம்பிக்கையாகும். தூய்மையான வெண்மை நிற துணி இல்லாவிட்டால், சுத்தமான பேப்பரிலும் சுற்றி வைக்கலாம்.
இரவல் நகைகள்
பிறருக்கு இரவல் கொடுத்த நகை என்றாலும், அதிலும் தோஷம் வரும்.. ஒருவர் போட்ட நகையை அப்படியே வாங்கி பயன்படுத்தி கொள்ளக்கூடாது. வியர்வை துளிகள் மூலம் நகைகளில் தோஷத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே பிறரின் நகைகளை அணிந்து கொள்வதற்கு முன்பு, நீரில் சிறிது பன்னீர், மஞ்சள் கலந்து அதில் நகைகளை போட்டு எடுத்து, அதற்கு பிறகே பயன்படுத்த வேண்டுமாம்.
நகைகள் வைக்க வேண்டிய திசை
எப்போதுமே வீட்டின் கன்னி மூலையில் அதாவது, தென்மேற்கு பகுதியில் தங்கத்தை வைக்கும்போது, தங்கம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கத்தை வைக்கக்கூடாது..
தங்க நகைகள் வைத்திருக்கும் லாக்கர், பணப்பெட்டியாக இருந்தாலும், வடக்கு திசையை நோக்கியே வைக்க வேண்டும். ஈசானிய மூலையில் தங்கம் மற்றும் பணம் வைப்பது மிகவும் நல்லது.. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் கடவுள் படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வருவதால், வீட்டில் தங்கம் பெருகும் என்பார்கள்.
தங்கம் வாங்குவதாக இருந்தால், அட்சய திருதியை தவிர, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் வாங்கலாம்.. அதேபோல புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த நட்சத்திரங்கள் சேர்ந்தது போல அட்சய திருதியை வந்தால் அன்றைய தினமும் நகை வாங்கலாம்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications