விநாயகரை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது? முட்டுச்சந்தில் பிள்ளையார் வைப்பது ஏன் தெரியுமா?
சென்னை: வீட்டில் விநாயகர் சிலையை எப்படி போற்ற வேண்டும் தெரியுமா? முச்சந்தியில் விநாயகர் சிலைகளை வைப்பது ஏன் தெரியுமா?
மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரக்கூடியவர் விநாயகர். அந்தவகையில், வீட்டில் விநாயகர் சிலையை வைப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.. பெரிய சிலையோ, சிறிய சிலையோ, எதுவாக இருந்தால் விநாயகர் சிலையை வைப்பது வீட்டிற்கு நன்மைகளை பெற்றுத்தரக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

எனினும், வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கு சில விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.. உங்கள் வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்க வேண்டுமானால், விநாயகர் சிலையை வைக்கும்போது ஒருசில விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து சாஸ்திரம்: அதன்படி, மாம்பழத்தோல் மற்றும் வேப்பங்கொட்டையால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாங்கி, வீட்டின் பிரதான நுழைவாயிலில் வைத்தால் மிகவும் நல்லதாம்.. ஆனால், விநாயகர் சிலையை வீட்டின் கதவுக்கு வெளியே வைக்க கூடாது.
அதேபோல வீட்டிற்குள் பணம் தங்கியிருக்க வேண்டுமானால், வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு வரவேண்டும். விநாயகப் பெருமானுடன் ஸ்படிக லட்சுமியை வழிபட்டால் செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் உண்டாகும். உட்கார்ந்த நிலையிலுள்ள விநாயகர் சிலையை வீட்டிலும், நின்ற கோலத்தில் விநாயகர் சிலையை பணியிடங்களிலும் வைக்கலாம்..
சதுர்த்தி திதி: ஆனால் பிள்ளையாருக்கு ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 2 பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை, கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்கலாம்.
வீட்டின் வடகிழக்கு மூலை தான் விநாயகர் சிலை வைப்பதற்கான சரியான இடமாகும்... இந்த இடத்தில் பூஜை அறை இருந்தால் இன்னும் சிறப்பை தரும்.. ஒருவேளை வடகிழக்கு மூலையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், விநாயகர் சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறு இருக்கும்படி வைத்து வழிபட வேண்டும்...
விநாயகர் சிலை: வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்கலாம். ஆனால், தெற்கு திசையில் மட்டும் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது.. அதேபோல, படுக்கை அறையிலோ, கழிவறைக்கு அருகிலோ, குளியலறை சுவரோடு ஒட்டியிருக்கும்படியோ, அல்லது படிக்கட்டுக்கு கீழேயோ விநாயகர் சிலையை வைக்கக்கூடாது.
தீமைகளை அழித்து, செல்வத்தையும், முன்னேற்றத்தையும் தரக்கூடிய தெய்வமாக விநாயகர் கருதப்படுவதால்தான், முட்டுச்சந்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளையும், குடும்பத்தினரையும் தீய சக்திகளிலிருந்து பாதுகாக்க முட்டுச்சந்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்.
சமூக ஒற்றுமை: அதுமட்டுமல்ல, முட்டுச்சந்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு சமூக, பொருளாதார பின்னணிகளை கொண்டவர்களாக இருக்கலாம்... இப்படி முச்சந்தியில் விநாயகர் சிலையை வைத்து வழிபடும்போது, அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வழிபடக்கூடிய ஒரு பொதுவான இடமாக மாறுகிறது. இது சமூக ஒற்றுமையை வளர்க்க பேருதவி புரிகிறது.
முச்சந்தியில் சிலை வைப்பதற்கு முன்பு, அந்த பகுதியின் மக்களிடம் அனுமதி பெற வேண்டும்.. சிலை வைக்க போதுமான இடத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும். விநாயகர் சிலை சுத்தமாகவும், நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications