இயேசு ஏன் பிறந்தார் தெரியுமா? எதற்கு மரித்து, உயிர்த்தெழவேண்டும்?
சென்னை: உலக வரலாற்றில் மிக பெரிய சரித்திரத்தை படைத்த இயேசுவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலின் காரணமாக கி.பி மற்றும் கி.மு என்று வரலாற்றில் குறிப்பிட்டு இருப்பதை பார்க்கலாம். கிறிஸ்துவத்தில், திரியேக தேவன் ஆதாவது (Trinity) என்ற சொல்லுக்கு, ஒரே தேவன், பிதாவாகவும், குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியாகவும், மூவரும் ஒரே தெய்வமாகவும் முழுமையானவர்களாகவும் ஒருவரோடு ஒருவர் இசைவு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
இயேசு ஏன் பிறந்தார் தெரியுமா: நாம் படைக்கப்பட்ட முக்கியமான நோக்கம் படைத்தவனை அறிந்துகொள்வது தான். இயேசு கிறிஸ்து உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பிதாவின் தேவன், இயேசு கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பினதற்கு, கிறிஸ்துவ மதத்திற்கு உலகம் முழுவதும் ஸ்தாபிக்கா அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு தலைவராக இருக்கவா அல்லது உலகத்தில் பெரிய ராஜகாந்த்தை ஏற்படுத்தி, அதில் ராஜாவாக ஆளும் படியாக அனுப்பினாரா? இல்ல. இதை (1 யோவான் 4: 9,10) வசனத்தில் பார்க்கலாம், நம்முடைய எல்லா பாவங்களை சுமந்து தீர்கிற ஒரு ஆட்டு குட்டியாக (பலியாகும்படி) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பிதா தம்முடைய குமாரன் இயேசுவை அனுப்பினார் என்பதே மிக பிரதான நோக்கமாய் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடுவதற்கு அல்ல, உணர்வு பூர்வமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

யாருக்காக சிலுவையில் மரித்தார்: ஏன், எதற்காக இயேசு சிலுவையில் மரித்தார், இதனால் யாருக்கு என்ன பலன்? ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் பலான, அல்லது மனிதகுலத்திற்கே பலன் இருக்கிறதா? இதனால், தெய்வத்தை எந்த காணோட்டத்தில் பார்க்கிறான், தெய்வம் மனுக்குலத்தை எந்த காணோட்டத்தில் பார்க்கிறார், ஆன்மிகத்தில் வளர்வதினால் என்ன பலன், சிலைவையில் மரித்ததற்கான ஒரு மிக பெரிய சரித்திரம், மற்றும் உண்மை இருக்கின்றது. இதை ஏசாயா 53:12 வசனத்தில், அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம், நம்மில் அநேகரை அவருக்காக மீட்டுக்கொண்டார். அநேகரை ரகசிய பாவங்களிலிருந்து மீட்டெடுப்பதற்கே அவர் சிலுவையில் மரித்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
உயிர்த்தெழுதல் எதை நிரூபிக்கிறது: அவர் மாம்சத்தில் கொலையுண்டு, ஆவியிலே உயிர்பிக்கப்பட்டார். ஆண்டவருடைய நோக்கங்களையும், மீட்பின் பரிபூரணத்தையும் காட்டுவதே இந்த உயிர்த்தெழுதல் மட்டுமே. உயிர்த்தெழுதல் இல்லை என்றால், கிறிஸ்துவம் என்று ஒன்று இல்லை. கிறிஸ்துவத்தின் மையத்தன்மையே உயிர்த்தெழுதலில் தான் அடங்கியிருக்கிறது. மீட்பு என்பது இரட்சிப்பின் நிறைவை நிரூபிக்கிறது, மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களில் உயிரோடே இருக்கிறேன் என்ற வேத வசனத்தை உறுதி செய்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications