இயேசுவின் ரத்தம் ஏன் சிந்தப்பட்டது... ரத்தத்தினால் மனித குலத்திற்கு அருளிய பலன் என்ன?
சென்னை: இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தியது மட்டுமல்ல, 7 வெவ்வேறு இடங்களில் ரத்தம் சிந்தினார் என்பதை வேதாகமத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இயேசு ரத்தம் சிந்தி, அவருடைய ரத்தம் சிந்துதலை விசுவாசிப்பதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்னவென்று பார்க்கலாம்.
அவர் சிலுவையில் ரத்தம் சிந்தி மரிப்பதற்கு மட்டுமல்ல, நமக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதற்காகவும் பரத்திலிருந்து இறங்கி பூமிக்கு வந்தார்.

இயேசு கிறிஸ்துவின் ரத்தம், நமக்கு என்ன செய்கிறது: ரத்தம் சிந்துதல் இல்லாமல் மீட்பு இல்லை என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு சிலுவையில் சிந்தின ரத்தத்தின் நோக்கம், ஆதியிலே ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் நிமித்தம், இழந்த ஆசிர்வாதத்தை, மீண்டும் (Restoration) நம்மோடு இணைவதற்காக, சிலுவையில் அவருடைய ரத்தத்தை சிந்தினார் என்று பார்க்கிறோம். ஒவ்வொருவரின் உயிர் ரத்தத்தில் இருக்கிறது, இதை வேதாகமத்தில் (லேவியராகமம் 17:11) என்ற வசனத்தில், "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் (சிலுவையில்) உங்கள் ஆத்மாக்களுக்காகப் பாவநிவர்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன், ஆத்மாவிற்குப் பாவநிவர்தி செய்கிறது இந்த இரத்தமே" என்று சொல்லப்படுத்திருக்கிறது.
இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டதின் நோக்கம்: இயேசுவினுடைய சிலுவை பாடுகள் தியானம் செய்யும்போது, மிக முக்கியமான காரியம், அவருடைய ரத்தம் நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்டுயிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த ரத்தம் பாவங்களை மட்டும் மன்னிக்குமா அல்லது இன்றும் இன்றளவும் இந்த இரத்தத்திற்கு வல்லமை உள்ளதா என்ற கேள்விக்கு, (கொலேசியார் 1:20) ல், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள், பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்கு (பிதாவிற்கு) பிரியமாயிற்று என்று சொல்லியிருக்கிறபடியே, பாவமன்னிப்பு மட்டுமின்றி, தெய்வத்திற்கும் மனிதகுலத்தையும் இருதரதரையும் ஓப்புரவாகி, சமாதானத்தை உண்ணு பண்ணினார் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
ரத்தத்தின் உடன்படிக்கை மற்றும் பலன்கள்: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தப்பட்ட அவருடைய ரத்தத்தில் நம்மோடே உடன்படிக்கை (Promise) செய்து, என்றும் (அவருடைய ரத்தத்தின்) மூலமாய் பல ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது ஆழமான சத்தியம் மற்றும் சாத்தியமே. எப்படியெனில் நம்முடைய பாவங்களின் நிமித்தம் வருகிற பலவிதமான தீராத நோய்கள், குடும்ப சாபங்கள், வியாதிகள், பயம், பாரம், ஆகிய அனைத்தையும் மன்னித்து, கழுவி, இருதயத்தை சுத்திகரித்து, சமாதானத்தை தந்து, விடுதலையாக்குவதே இரத்தத்தின் பலனாய் இருக்கின்றது. இதை ஏசாயா 53:5 வசனத்தில், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று சொல்லப்பட்டியிருப்பதை பார்க்கலாம். எனவே அவருடைய ரத்தத்தின் வல்லமையும், தழும்புகளில் உள்ள வல்லமையையும் விசுவாசிக்கும்போது, அந்த சுகத்தை அல்லது விடுதலையை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது சத்தியம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications