பெண்களே படுக்கை அறையில் "இந்த" ஒரு பொருளை வைக்காதீங்க!.. ஆன்மீகம் சொல்வது என்ன?
சென்னை: தூங்கும் அறையில் பெண்கள் "இந்த" ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கவே கூடாது. அப்படி செய்தால் நிச்சயம் மன நிம்மதி கெடும்.
நம் முன்னோர்கள் கூறிய சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் நமக்கு நன்மைகளையே கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்தந்த மதத்திற்கேற்ப சம்பிரதாயங்கள் வேறுபடுகின்றன.
ஆனால் எந்த மதமாக இருந்தாலும் அந்தந்த சாஸ்திரங்களை கடைப்பிடித்தல் என்பது குடும்ப நன்மைக்கு வழிவகுக்கும். அந்த வரிசையில் செவ்வாய், வெள்ளி நகம் வெட்டக் கூடாது, முடி வெட்டக் கூடாது.

பொழுதுபோனதும்
பொழுது போனதும் பரமபதம், தாயம் விளையாடக் கூடாது. மாலை வேளைகளில் துணி தைக்கக் கூடாது என்ற சாஸ்திரங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் நாம் பின்பற்றுகிறோமா என்றால் ஆம் என்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். காரணம் இன்று சாஸ்திரம் பார்ப்பதற்கு நேரமின்மைதான்.

இரும்பு பொருட்கள்
அந்த வகையில் மற்றொரு தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் தூங்கும் அறையில் இரும்பு பொருட்கள் தலைமாட்டிலோ, தலைக்கு நேராகவோ இருக்கவே கூடாது. அவ்வாறு இருந்தால் அது நெகட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் சாஸ்திர நிபுணர்கள்.

இரும்பு இருக்கக் கூடாது
இரும்பு என நிபுணர்கள் சொல்வது ஆணி, சுத்தியல், இரும்பு பீரோ, இரும்பு கட்டில், தலையில் பயன்படுத்தப்படும் இரும்பு ஹேர்பின்கள் ஆகியவை இரும்பில் இருக்கக் கூடாது. மேலும் திருமாங்கல்யத்திலும் இரும்பு பொருட்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது. இது நமது நிம்மதியையும் தூக்கத்தையும் கெடுக்கும் என்கிறாரகள். மேலும் வயதுக்கு வரும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் பெண்கள் இருக்கும் போது தீயசக்திகள் அண்டாமலிருக்க சிலர் இரும்பு பொருட்களை தலைமாட்டில் வைப்பது உண்டு.

வசந்தம்
இதற்கு என்ன காரணம் என்றால் ஆண்களை காட்டிலும் பெண்கள்தான் கவலைகளை சுமக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இரவு நேரத்தில் உறக்கமின்மை ஏற்படும். தூங்காததால் மறுநாள் காலை பிரஸ்ஸாக இருக்காது. எனவே மறந்தும் கூட இரும்பை படுக்கை அறையில் வைத்துவிடாதீர்கள் பெண்களே! இதனால் அந்த நாள் இனிய நாளாக அமையாது. எனவே இது போன்ற சிறிய சிறிய தவறுகளை களைந்தால் வாழ்ககையில் வசந்தம் வீசும்.












Click it and Unblock the Notifications