ஐபோன்களுக்கு தடை விதிப்பேன்.. எலான் மஸ்க் மிரட்டல்.. அதிர்ந்த ஆப்பிள் நிறுவனம்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது தொலைத்தொடர்பு கருவிகளில் ஓபன் ஏ.ஐ -யை இணைத்தால், தனது கம்பெனிகளில் ஐபோன்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வேகமாக வளர்ந்துவிட்டது. அதிலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்த பிறகு தொழில் நுட்ப உலகையே புரட்டி போட்டுவிட்டது எனலாம். உலகில் எங்குத் திரும்பினாலும் ஏஐ தான்..

உலகம் எப்படி இயங்குகிறது என்பதையே இந்த ஏஐ மொத்தமாக மாற்றும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே ஏஐ ஆய்வுகளுக்கு நிதியும் குவிகிறது. ஏஐ துறை இந்தளவுக்கு முக்கியத்தவம் பெற சாட் ஜிபிடி தான் முக்கிய காரணம்.. சாட் ஜிபிடியின் வெற்றி என்பது ஏஐ துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றே சொல்லலாம்.
ஏஐ தொழில் நுட்பம் மொத்தமாக டெக் உலகை ஆட்டி படைக்க தொடங்கியுள்ள நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களில் சாட் ஜிபிடி தொழில் நுட்பத்தை அமல்படுத்தும் விதமாக ஏஐ தொழில் நுட்பத்தின் சில அம்சங்களை தனது செயலிகள் மற்றும் இயங்கு தளத்தில் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆப்பிள் அறிவித்தது.
இந்த நிலையில்தான், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால், ஐபோன்களுக்கு தனது அலுவலகத்தில் தடை விதிப்பேன் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளர். இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது இயங்கு தளம் (ஓஎஸ்) களில் ஓபன் ஏஐ-யை ஆப்பிள் நிறுவனம் இணைத்தால், ஆப்பிள் டிவைஸ்களுக்கு எனது கம்பெனிகளில் தடை விதிக்கப்படும்.
ஏனெனில், ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல் இதுவாகும். விசிட்டர்களும் அலுவலகத்திற்கு வரும் முன்பே அவர்களிடம் ஆப்பிள் கருவி இருக்கிறதா என சோதிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனமோ, ஓபன் ஏஐ நிறுவனமோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் உலக பெரும் பணக்காரருமான எலான்மஸ்க்கின் இந்த பதிவு ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications