"இது ரொம்ப மோசம்.." 6இல் ஒரு இந்தியர் ரீல்ஸ், ஷாட்ஸ் தினசரி 1.2 மணி நேரம் பார்க்கிறார்கள்
டெல்லி: இந்தியர்கள் ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற தளங்களுக்கு எந்தளவுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது குறித்து பகீர் ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது.
இந்த டிஜிட்டல் காலத்தில் மொபைல் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறலாம். நம்மில் பெரும்பாலானோர் கணிசமான நேரத்தை மொபைல்களை பார்ப்பதிலேயே கணிக்கிறார்கள். இதனால் குடும்ப உறவுகளில் சிக்கல் தொடங்கிப் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதற்கிடையே இந்தியர்கள் எந்தளவுக்கு இணையத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் பகீர் ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
25 கோடி இந்தியர்கள்: நமது நாட்டில் சுமார் 25 கோடி பேர் Moj, Roposo உள்ளிட்ட ஷார்ட் வீடியோ தளத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் தளங்களைத் தவிர்த்தே இந்தளவுக்கு நமது இந்தியர்கள் வீடியோ தளங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்,
1.2 மணி நேரம்: சராசரியாக இந்தியப் பயனாளர்கள் தினசரி 1.2 மணி நேரம் வரை ஷார்ட் வீடியோ தளத்தில் நேரத்தைச் செலவழிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இதில் இருக்கும் பயனர்களில் 65-75% பேர் இரண்டாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது 10 கோடி பேர் இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வருகிறார்கள்.
டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள ஷார்ட் வீடியோ தளங்கள் ஹிட் அடித்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆறு மாதங்களில் 58%க்கும் அதிகமானோர் கணிசமான நேரத்தை இதுபோன்ற தளங்களில் நேரத்தை செலவழிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
என்ன காரணம்: இதுபோன்ற தளங்களில் பிராந்திய மொழிகளில் உள்ளூர் கன்டென்ட்கள் அதிகம் இருப்பதே ஆய்வாளர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்த முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு ஜன.- ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒர்ஜினல் கன்டென்ட்கள் 92% வரை அதிகரித்தது. இதுவே இந்தாண்டு ஒர்ஜினல் கன்டென்ட்கள் 99% வரை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இவை ஒரு காரணம் என்றால் இதில் மற்றொரு விஷயமும் இருக்கவே செய்கிறது. அதாவது இந்த தளங்களை அவர்கள் மிகப் புத்திசாலித்தனமாக வடிவமைத்துள்ளனர். அதாவது பயனாளர்கள் தங்கள் தளங்களில் அதிக நேரம் செலவிடும் வகையில் அவர்கள் அந்த தளங்களை வடிவமைத்துள்ளனர். அதாவது பிடித்த கன்டென்ட்களை தொடர்ச்சியாகக் காட்டி, அதன் மூலம் பயனாளர்களை அதிக நேரம் தக்க வைக்கிறார்கள்.
நிறுவனங்கள் போடும் பிளான்: ஒரே கன்டென்ட்கள் திரும்பத் திரும்ப வராமல் இருப்பதும்.. கன்டென்ட்கள் புதிதாக இருப்பதும் தான் இதற்குக் காரணம். அதாவது நீங்கள் நாய் சேட்டை வீடியோ எதாவது லைக் செய்தால், அதேபோன்ற கன்டென்ட்கள் தான் திரும்ப திரும்ப காட்டும். இதுவே பயனாளர்கள் அதே தளங்களில் அதிக நேரம் இருக்கக் காரணமாகும். ஒவ்வொரு முறை ரிப்ரேஷ் செய்யும் போதும் புதிய வீடியோக்கள் வருவதையும் இந்த நிறுவனங்கள் உறுதி செய்கிறது.
இதற்காக அவர்கள் மெஷின் லேர்னிங் மற்றும் natural language processing ஆகிய அல்காரிதம்களைப் பயன்படுத்துகின்றனர். இவை நாம் இந்த தளங்களில் எதை விரும்பி பார்க்கிறோம், அதைப் பார்ப்பதில்லை. எதற்கு லைக் செய்கிறார்கள் என அனைத்தையும் நோட் செய்து கொள்ளும். அதன் அடிப்படையில் பயனாளர்களுக்கு கன்டென்ட்கள் சென்று சேர்வதை இவை உறுதி செய்கிறது. இதுவே இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் உள்ள மக்கள் இதுபோன்ற தளங்களுக்கு அடிமையாக இருக்கக் காரணமாக இருக்கிறது.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications