"குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்களை தர முடியாது.." வினோத காரணத்தை சொன்ன டெலிகாம் நிறுவனங்கள்
டெல்லி: இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காக டேட்டா இல்லாத, வெறும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று டிராய் பரிந்துரை அளித்தது. இருப்பினும், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உலகிலேயே மிக குறைந்த டேட்டா கட்டணத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் இப்போது வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் என எல்லாமே சேர்ந்து ஒரே பேக்காகவே பிளான்கள் உள்ளன. இதனால் டேட்டாவை பயன்படுத்தாதவர்களும் அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

பரிந்துரை
இதை தடுக்க டேட்டா இல்லாத, வெறும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று டிராய் பரிந்துரை அளித்தது. ஆனாலும், இந்தியாவின் மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என மூன்று நிறுவனங்களுமே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
டிராய் வாதம்
இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் சாதாரண பீச்சர் போன்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 10 முதல் 15 கோடி மக்கள் இணைய வசதியைப் பயன்படுத்துவதே இல்லை. டேட்டா பயன்படுத்தாத முதியவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள், தங்களுக்குத் தேவையில்லாத டேட்டாவுக்காகவும் சேர்த்து பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் கருத்துப்படி, மக்கள் தங்களுக்குத் தேவையில்லாத டேட்டா சேவைகளுக்காக ஆண்டுக்கு சுமார் ₹15,000 முதல் ₹20,000 கோடி வரை கூடுதலாகச் செலவிடுகின்றனர். ஆரம்பக்கட்ட ரீசார்ஜ் திட்டங்களில் 1 GB டேட்டாவின் விலை ₹94-99 வரை உள்ளது. இது வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் பிரீமியம் திட்டங்களை விட மிக அதிகம். மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின கிராமங்களில் பல நேரங்களில் இன்டர்நெட் சிக்னல் கிடைப்பதே இல்லை. அப்படி இருக்கும்போது, அந்த மக்கள் ஏன் டேட்டா திட்டங்களை வாங்க வேண்டும் என்பது நுகர்வோர் அமைப்புகளின் கேள்வியாக உள்ளது.
ஜியோ
அதேநேரம் டெலிகாம் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைத் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமற்றது மற்றும் நுகர்வோருக்கு எதிரானது என்று கூறுகின்றன. ஜியோ நிறுவனம் தனது 4G மற்றும் 5G நெட்வொர்க்குகள் முற்றிலும் இணையம் சார்ந்தவை என்று கூறுகிறது. அதாவது, இந்த நெட்வொர்க்குகளில் வாய்ஸ் கால்கள் என்பதும் ஒரு டேட்டா அப்ளிகேஷன் போல தான் செயல்படுகிறது. எனவே, டேட்டாவை துண்டித்துவிட்டு வெறும் வாய்ஸ் மட்டும் வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சிக்கலானது என்கிறது. மேலும், மலிவான திட்டங்கள் வந்தால் மோசடி செய்பவர்களுக்கு அது சாதகமாகிவிடும் என்றும் ஜியோ எச்சரிக்கிறது.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியாவை பொறுத்தவரை, டேட்டா இல்லாத திட்டங்களை வழங்கினால், போனில் தானாக நடக்கும் சாப்ட்வேர் அப்டேட்கள் அல்லது ஓடிபி சரிபார்ப்பு போன்றவற்றுக்கு தெரியாமல் டேட்டா செலவாகும். அப்போது 'Pay-as-you-go' முறையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கே இது எதிராக அமையும் என்கிறது.
ஏர்டெல்
மறுபுறம் ஏர்டெல்லை பொறுத்தவரை, "இந்தியா தற்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. அரசின் அனைத்து சேவைகளும் மொபைல் வழியாகவே வழங்கப்படுகின்றன. இந்தச் சூழலில் டேட்டா இல்லாத திட்டங்களைக் கொண்டு வருவது, மக்களை டிஜிட்டல் உலகிலிருந்து அந்நியப்படுத்தும்" என்று வாதிடுகிறது.
டெலிகாம் நிறுவனங்கள் தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால், நுகர்வோர் அமைப்புகளோ, ஏழை மக்களுக்குத் தங்களுக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவாதம் தொடர்பாக TRAI நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சாதாரண மக்களுக்குச் சுமை இல்லாத, அதே சமயம் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான ஒரு முடிவை TRAI எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications