சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் இல்லை...60 பேர்!
சென்னை: சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் மட்டும்தான் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுடன் சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் போதாது என்று சின்னத்திரை, பெரியதிரை தயாரிப்பு சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.
கோரிக்கையில் 20 பேர் போதாது என்றும், அதிகப்படியான ஆட்களை வைத்து சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சின்னத்திரை, பெரியதிரை தயாரிப்பு சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.
இதையடுத்து நாளை முதல் 60 பேரை வைத்து ஷூ ட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவுப் பிறப்பித்து இருக்கிறது. 60 என்பதில் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகையர் மட்டும் அல்லாமல் டெக்னீசிஷியன்ஸ் உட்பட என்றும் தெரிவித்து இருக்கிறது தமிழக அரசு.

சென்னை மாநகராட்சி
சென்னையில் படப்பிடிப்பு நடத்த சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மற்ற ஊர்களில் ஷூட்டிங் நடத்த, அந்தந்த வட்டாட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது தமிழக அரசு,.இப்படி எல்லாவித கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடத்த நாளை முதல் அனுமதியும் வழங்கி உத்தரவுப் பிறப்பித்து இருக்கிறது.

கோவிட் 19 லாக்டவுன்
கோவிட் 19 தொற்று காரணமாக மத்திய அரசு, தமிழக அரசு விதித்து இருந்த லாக்டவுன் காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இன்னமும் கோவிட் 19 தொற்று என்பது கட்டுக்குள் வரவில்லை என்றும், மென்மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும்தான் அன்றாட செய்திகள் கூறும் தகவல்களாக இருக்கிறது.

சின்னத்திரை ஷூட்டிங்
இந்த நேரத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு ஷூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தொலைக்காட்சி பணிகள் இந்த லாக்டவுன் நேரத்தில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் பாதிக்கபடவில்லை என்று சொல்லலாம். இப்போது சீரியல்கள் ஷூட்டிங் நடத்தவும் அனுமதி வழங்கி இருப்பதால், 99 சதவிகிதம் தொலைக் காட்சிகள் வழக்கம் போல் செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரிஸ்க்தான்...படைப்பு?
உண்மையில் ரிஸ்க் எடுத்துதான் சீரியல் ஷூட்டிங் நடைப்பெற இருக்கிறது. எனவே, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளில் கவனம் செலுத்தி, தரமான சீரியல்களை மக்களுக்கு தர வேண்டும் என்பது மட்டுமே ரசிகர்களின் கோரிக்கை. பின்னே அவர்களின் கோரிக்கை வேறு என்னவாக இருக்க முடியும்?
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications