பாடகர் மனோவின் மகன்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.. ஆனால் ஒரு நிபந்தனை!
சென்னை: பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் இருவரும் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்களை தாக்கியதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு உயர்நீதி மன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு ஒரு நிபந்தனையும் கொடுத்து இருக்கின்றனர். அதுபற்றி பார்க்கலாம்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஷாகிர் மற்றும் ரபிக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு பாடகர் மனோவின் மகன்கள் தங்கள் வீட்டில் முன்பு நண்பர்களோடு பேசிட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர் மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மனோவின் மகன்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் மனோவின் மகன்கள் அவருடைய நண்பர்களோடு ரித்தீஷ் மற்றும் கிருபாகரன் என்ற இளைஞர்களை தாக்கி தாக்கி அவர்களை முட்டி போட வைத்ததை பார்த்து அவருடைய நண்பர்கள் ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து சில வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தனர். அப்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர்களை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பரான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை கைது செய்தனர்.
மனோவின் மகன்கள் உட்பட மூன்று பேர் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மனோவின் மனைவி கண்ணீரோடு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் என்னுடைய மகன்கள் எந்த தப்பும் செய்யவில்லை. என்னுடைய கணவர் பெயரை கெடுக்க வேண்டும் என்று சிலர் சதி செய்கிறார்கள் அந்த இளைஞர்கள் தான் எங்களை தாக்கி இருந்தார்கள் என்று கூறியிருந்தார்.

பிறகு பாடகர் மனோவின் மகன்களை மோட்டார் சைக்கிளில் வந்து எட்டு பேர் சேர்ந்து உருட்டு கட்டை கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்த போது 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications