அழிவு காலம்.. கோபத்தில் அதிரடியாய் முடிவெடுத்த யாஷிகா... ஆதரவு கொடுப்பார்களா பிரபலங்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் ப்ளூ டிக் பறிபோயிருக்கிறது.
அதுகுறித்து யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
எல்லோரும் ட்விட்டர் விட்டு வெளியேற வேண்டும் என்று பிரபலங்களுக்கு யாஷிகா வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கிய யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர். இவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு கிளாமர் ரோல் தாறுமாறாக வந்து இறங்க, அதையே சமூக வலைத்தளத்தில் பின்பற்றி தன்னுடைய பாலோவர்ஸ்களை அதிகமாக வைத்து இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களை பாலோவர்ஸ்களாக கொண்ட நடிகைகளில் யாஷிகா ஆனந்த் ஒருவர். இவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் நடந்த மாற்றத்தால் கடும் கோபத்தில் இருக்கிறார் twitter நிறுவனத்தை எல்லாம் மாஸ்க் வாங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை அதில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது.

அந்த மாற்றங்களில் வரிசையில் தான் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ளூ டிக் க்கு சந்தா கட்டுவது என்பது. சந்தா கட்டி தான் இனி ப்ளூ டிக் பெற முடியும் என்று ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான காலக்கெடு நேற்று இரவு முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து சந்தா கட்டாத பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூடிக் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. இதில் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் கொண்டவர்களும் ப்ளூடிக் இழந்து இருக்கின்றனர். அந்த வரிசையில் யாஷிகா ஆனந்தம் ஒருவர். இவர் உடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் தற்போது கோபத்தோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு ஒன்றை தட்டி விட்டிருக்கிறார்.

இதில் யாஷிகா டுவிட்டர் பக்கத்தை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ட்விட்டரின் downfall ஆரம்பமாகிவிட்டது. காசு கொடுத்து Verifiedஆக இருக்க முடியாது. எல்லோரும் ட்விட்டரை விட்டு வெளியேறிவிடலாம் என மற்ற பிரபலங்களையும் தனக்கு சப்போர்ட்டாக அழைத்து இருக்கிறார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications