பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறும் பிக் பாஸ் ஆரி.. அதுவும் யாருக்கு பதிலா தெரியுமா? செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடந்த நடிகர் ஆரி விரைவில் "கலைஞர் டிவி"யில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இயக்குனராகவும், நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருக்கும் கரு பழனியப்பன் ஏற்கனவே "ஜீ தமிழில் தமிழா தமிழா" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெரிய அளவில் பிரபலமடைந்தார். ஆனால் திடீரென்று பல வருடங்களாக தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியில் இருந்து கருப்பழனியப்பன் வெளியேறி இருந்தார். அதே நேரத்தில் தனக்கு அழுத்தம் அதிகமாக இருந்ததால் தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேன்.

நம்மால் சுயமாக எந்த இடத்தில் முடிவெடுக்க முடியவில்லையோ பிறகு அந்த இடத்தில் நாம் இருந்து அர்த்தம் இல்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வந்த அடுத்த சில வாரங்களிலேயே கலைஞர் டிவியில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கரு பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தொகுப்பாளராக ஆரி இருப்பது போன்ற காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் சிலர் ஆரி எடுத்த முடிவு சரி என்று கூறி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்துவிட்டார் ஆனால் அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் பெரியதாக இல்லை என்பதால் தொகுப்பாளராக மாறிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் ஆரியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருப்பதாகவும் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி கலந்து கொண்டிருந்தபோது ஆரம்பத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தார்.
ஆனால் அடுத்த ஒரு சில வாரங்களிலேயே அவருக்கும் பாலாஜிக்கு ஏற்பட்ட பிரச்சனை, அதற்கு பிறகு உள்ளிருக்கும் மற்றவர்களோடு இவர் தனித்து இருந்ததாலே இவர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதே நேரத்தில் விவசாயத்தில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாகவே உள்ளே சாப்பாடு வீண் ஆகும் போதெல்லாம் ஆரி குரல் கொடுத்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அதனாலயே அந்த சீசனில் வெற்றியும் பெற்றிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு பெரிய அளவில் திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது இவர் சின்னத்திரைக்கு வந்திருக்கும் நிலையில் இதன் மூலம் அவருடைய கனவுகள் நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications