சோகத்தில் திரையுலகம்: 'ஆச்சி' மனோரமாவின் மகன் பூபதி காலமானார்! இந்த திரைப்படத்திலும் நடித்திருந்தாரே!
சென்னை: தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை 'ஆச்சி' மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று (23.10.2025) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான அவர், இன்று காலை 10.40 மணிக்கு இயற்கை எய்தினார்.

மனோரமாவின் மகன் பூபதி
நடிகை மனோரமா 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, உலக சாதனை புரிந்தவர். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களையும், போராட்டங்களையும் சந்தித்தவர். பூபதி, மனோரமாவின் ஒரே மகனாவார்.

பூபதி, சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் நடித்த சில வேடங்கள் குறிப்பிடத்தக்கவை. அதுபோல மனோரமா நடித்த "நான் பெத்த மகனே" படத்திலும் பூபதி நடித்திருந்தார். மறைந்த நடிகர் விசுவின் திரைப்படத்தில் தான் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார்.
பூபதியின் குடும்பம்:
பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மனைவி B. தனலெட்சுமி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்: B. ராஜராஜன், B. அபிராமி ,B. மீனாட்சி ஆவார்கள்.
கண்ணீருடன் இறுதி அஞ்சலி:
காலஞ்சென்ற பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Door No.9/5, நீலகண்ட மேத்தா தெரு, T Nagar இல்லத்தில் வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் நாளை 24-10- 2025 மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும்.
தாயின் புகழைத் தாங்கி வாழ்ந்த பூபதி, திரையுலகில் தன் பங்களிப்பைச் செலுத்திச் சென்றுள்ளார். 'ஆச்சி' மனோரமாவின் ரசிகர்களும், திரையுலகினரும் அவரது மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications