Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய், அஜித் மோசமான நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.. அப்படி புலம்பும் காலம் வரும்.. போஸ் வெங்கட் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் மூலம் பிரபலமடைந்த போஸ் வெங்கட் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்துவரும் நிலையில் இயக்குனராகவும் ஒரு சில திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் அஜித் குறித்து கடுமையாக விமர்சித்து போஸ் வெங்கட் பேசி இருக்கிறார்.

actor Bose Venkat has criticized Vijay and Ajith in an interview

அதோடு சின்ன திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களின் கஷ்டங்கள் குறித்தும் பெரிய திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் நடிகர்கள் குறித்தும் தன்னுடைய சில வருத்தங்களை போஸ் வெங்கட் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த நிலைமைக்கு காரணம் விஜய் மற்றும் அஜித் தான் என்று மனவேதனையில் நடிகர் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் போஸ் வெங்கட் திரைப்பட இயக்குனராகவும், திமுக தலைமை கழக பேச்சாளராகவும் இருந்து வரும் நிலையில் இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்கு நுழைந்து தற்போது வரை பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதோடு போஸ் வெங்கட் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கேரக்டர் மூலம் இவர் மக்கள்
மத்தியில் பிரபலமாகியதால் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும் இவருக்கு இந்த சீரியல் மூலமாகத்தான் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். அந்த திரைப்படத்தில் கதையானது போஸ் வெங்கட் ஆரம்ப காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட சம்பவங்கள் பற்றி தான் இருந்தது.

அதைத்தொடர்ந்து போஸ் வெங்கட் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் தற்போது தமிழ் சினிமா மோசமான நிலைமையில் இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தால் சினிமா பெரிய சாதனை படைத்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா அதனால்தான் இறந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா நம் கையில் இல்லை. வெளியாட்கள் கையில் தான் இருக்கிறது.

பணம் சம்பாதிக்க பல நிறுவனங்கள் அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறார்கள். இவர்களுடைய படங்கள் தான் ஆயிரம் தியேட்டர்களில் நான்கு காட்சிகளாக ஓடுகிறது. இவர்களுடைய படம் வெளியாகும் போது வேறு எந்த நடிகர்களுடைய படமும் வெளியிடக்கூடாது. அப்படியே வந்தாலும் யாரும் கண்டு கொள்ளக்கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இவர்களை தாண்டி படம் இல்லை. தமிழ் சினிமா தன் அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கிறது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. எதிர்காலத்தில் ஓடிடிட்டியில் யார் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் காலம் வந்துவிடும். அப்போது மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஒரு நடிகர் வருவார்.

அப்போது விஜய்யும் அஜித்தும் சாதாரணமாக நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளுவார்கள். அவர்கள் புலம்பும் காலம் விரைவில் வரும். அவர்கள் மாறிய பிறகு தான் தமிழ் சினிமா நிலை மாறும். எல்லா படங்களும் வெளியானால் தான் ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்று அந்த பேட்டியில் போஸ் வெங்கட் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+