இப்படிலாம் பேசலாமா..? எதிர்நீச்சல் குணசேகரனுக்கு நடிகர் தினேஷ் வைத்த வேண்டுகோள்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் விரைவில் வெளியாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் இப்போது என்னால் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில் நடிகர் தினேஷ் இதற்கு சில விளக்கங்களும் கொடுத்து கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

சமீபத்தில் சின்ன திரையில் பெரிய அளவில் பேசப்படும் ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய திடீர் திருப்பங்கள் அந்த சீரியலுக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் நடிகர்களும் தங்களுடைய நடிப்பை எதார்த்தமாக காட்டி வருகின்றனர்.
அதில் வில்லனாக இருந்தாலும் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு கேரக்டராக நடிகர் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு என்று இப்போது அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சமூக வலைத்தளத்தில் இவர் பேசும் டயலாக்குகள் தான் இப்போது மீம்ஸ் மற்றும் டெம்ப்லேட்டாக மாறி வருகிறது.
வெள்ளித்திரையில் இதுவரைக்கும் நடித்து வந்த மாரி முத்து முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பு வந்திருக்கிறது. அதுவும் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் நடிப்பதற்கு முதலில் குணசேகரனிடம் தான் பேசப்பட்டதாம். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மாரிமுத்து கூறியிருந்தார்.
நான் ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது என்னிடம் ராதிகா மேடம் கால் பண்ணி கேட்டார்கள். இது சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தின் சாயலில் இருக்கும் என்று இது விசு கேரக்டர் போன்று முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டருக்கு அப்பா கேரக்டரில் என்னை நடிக்கும்படி கேட்டார். ஆனால் எனக்கு சில சூழ்நிலை சரி இல்லாததால் அதில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. அதில் தான் இப்போது எஸ்.ஏ சந்திரசேகர் சார் நடிக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக இந்த செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து பிரபல சீரியல் நடிகரான தினேஷ் மாரிமுத்து சார் இப்படி பேசி இருக்க கூடாது. எதிர்நீச்சல் சீரியலில் கூட மாரிமுத்து சார் செலக்ட் பண்ணுவதற்கு முன்பாக நிறைய பேர் ஆடிஷனில் கலந்து கொண்டு இருப்பாங்க. அப்படித்தான் இவரும் கலந்து கொண்டு இப்போது தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அது மாதிரி தான் கிழக்கு வாசல் சீரியலிலும் சந்திரசேகர் சாருக்கு முன்பு நிறைய பேர் ஆடிஷன் போயிருப்பாங்க. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பார்க்க கூடாது. நாம நடிக்க முடியாமல் போயிட்டா அதை பத்தி பேசி அடுத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாது. இது நான் எல்லாருக்கும் வைக்கிற வேண்டுகோள் என்று கூறி இருக்கிறார். தற்போது இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications