Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. கார்த்திக்கால் பட்ட கஷ்டம் குறித்து மகன் கௌதம் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் கார்த்திக் மகன்தான் கௌதம் கார்த்திக்.

முதல்முறையாக கௌதம் கார்த்திக் தன்னுடைய அப்பா தன்னுடைய அம்மாவை பிரிந்து வேறு திருமணம் செய்த பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

Actor Gautham Karthik has spoken about his father separated from his mother and remarried

அத்தோடு பெற்றோர்கள் யாராக இருந்தாலும் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்று அதிகமான ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கார்த்திக். இவர் முதல் முறையாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கார்த்திக் எதிர்பார்க்காத அளவிற்கு அவருடைய முதல் படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.

அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில் மௌனராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கார்த்திக் முன்னணி நடிகராக மாறிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ரஜினி கமலுக்கு போட்டியாக இவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் திடீரென்று சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கடந்த 2015 ஆம் ஆண்டு அனேகன் என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக மீண்டும் அறிமுகம் ஆகியிருக்கிறார். அதோடு கார்த்திக் தனிப்பட்ட வாழ்க்கையை முதலில் ராகினி என்பவரை திருமணம் செய்து இருந்தார்.

ராகினியும் கார்த்திக்கும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்களுக்கு கௌதம் கார்த்திக் மற்றும் இன்னொரு மகனும் பிறந்தனர். இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியையும் கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய அம்மா அப்பா பிரிந்து இருந்த வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார்.

Actor Gautham Karthik has spoken about his father separated from his mother and remarried

அதாவது அப்பா தன் சித்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தான் அம்மாவை அவர் பிரிந்து விட்டார். அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டதால் நானும் தம்பியும் தனிமையில் வாடினோம். அப்போ அப்பா சென்னையில் இருந்தார். நானும் தம்பியும் ஊட்டியில் அம்மாவோடு இருந்தோம். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அப்பா போன் செய்து பேசுவார். அந்த நேரத்தில் அவரும் பிசியாக இருந்தார்.

எப்பவாவது எங்களை பார்க்க வருவார். சிறு வயதில் இருந்து என்னையும் என் தம்பியையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டது என்னுடைய அம்மா தான். அப்போது ஸ்கூல், காலேஜ் ஃபங்ஷனில் எல்லோருக்கும் அம்மா அப்பா வருவாங்க.எனக்கு அப்பா அம்மா பிரிந்து இருக்கிறது தெரிந்திருந்தாலும் மேடையில் நிற்கும் போது எங்களை அறியாமலும் அந்த கண்கள் அங்கே அப்பாவை தேடும்.

அது எங்களுக்கு மட்டுமல்ல எங்களைப் போல சிங்கிள் பேரண்ட் வளர்ப்பில் இருக்கும் பல குழந்தைகளின் நிலைமையும் இதுதான். அந்த இடத்தில் ஒரு தனிமையை உணர்ந்து கண்டிப்பாக அவர்களுக்கு அம்மாவோ, அப்பாவோ யார் நம்ம கூட இல்லையோ அவர்களை மிஸ் பன்னி தேடுவோம். அதனாலேயே குழந்தைகளின் நலத்தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கௌதம் உருக்கமாக வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+