Jayam Ravi- Aarti: 6 மாதங்கள் கழித்து ஆர்த்தியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி! என்ன பேசினார்?
சென்னை: விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி வீடியோ கான்பிரன்ஸில் ஆஜரானார். அப்போது விவாகரத்து சட்டத் திட்டத்தின்படி இருவரும் பேசிக் கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சமரச பேச்சுவார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த விவாகரத்து வவக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்துள்ளார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நேற்று (நவம்பர் 15)விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார்.
அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் அன்றைய தினமே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு எடுக்கபட்டது. அப்போது ஆர்த்தி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதையடுத்து, ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. எனினும் ஆர்த்தி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்ட நிலையில், வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications