Jayam Ravi- Aarti: 6 மாதங்கள் கழித்து ஆர்த்தியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி! என்ன பேசினார்?
சென்னை: விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி வீடியோ கான்பிரன்ஸில் ஆஜரானார். அப்போது விவாகரத்து சட்டத் திட்டத்தின்படி இருவரும் பேசிக் கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சமரச பேச்சுவார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த விவாகரத்து வவக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்துள்ளார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நேற்று (நவம்பர் 15)விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார்.
அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் அன்றைய தினமே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு எடுக்கபட்டது. அப்போது ஆர்த்தி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதையடுத்து, ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. எனினும் ஆர்த்தி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்ட நிலையில், வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications