கண்ணகினு சொல்லிட்டு! கணவர் முன்பு விஷாலுக்கு இப்படி முத்தம்? குஷ்புவை சீண்டிய மன்சூர் அலிகான்
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது நடிகை குஷ்பூ தன்னை கண்ணகி என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய கணவர் முன்பே விஷாலுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கலாமா? என்று பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து முன்னணி நடிகராகவும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்தில் தான் நடிகை திரிஷாவை பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் நடிகை திரிஷா மற்றும் குஷ்பூ குறித்து மன்சூர் அலிகான் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மன்சூர் அலிகான் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மேடைகளில் இவர் பேசும் விஷயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகிறது.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ப்ரீ ரிலீஸ் நடைபெற்றது. அப்போது அந்த திரைப்படத்தை பற்றி பத்திரிகையாளர்களோடு பேச இந்த திரைப்படத்தில் நடித்த விஷால், குஷ்பூ, சுந்தர் சி, விஜய் ஆண்டனி உட்பட பலர் கலந்துகொண்டு பேசியிருந்தனர்.
அப்போது விஷால் மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த குஷ்பு விஷாலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதைப்பற்றி இன்று மேடையில் பேசிய மன்சூர் குஷ்பூ பச்சக் பச்சக்னு முத்தம் கொடுத்தாங்க.. இது அடுத்தவன் பொண்டாட்டி என்று ஆக்ஷன் உடன் செய்து காட்டி இருக்கிறார்.
அதோடு மேலும் பொது இடங்களில் கண்ணகி கண்ணகி என்று பேசிவிட்டு கோவலன் இல்லாமல் வேறு ஒருவருடன் இப்படி முத்தம் கொடுக்கலாமா? இதை சுந்தர் சி வேதனையோடு தான் பார்த்திருப்பார். விஷாலுக்கு இப்போதே கைகள் நடுங்க தொடங்கி விட்டன. அவருக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை.. ஆனாலும் சீக்கிரமாக சரியாகிவிடும் என்று அந்த பேட்டியில் மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications