45 வயதாகியும் நடிகர் பிரபாஸ் கல்யாணம் செய்யாத காரணம் இதுதானா? கண்கலங்கி அம்மா சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் பிரபாஸ் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கும் அவருக்கு 45 வயதாகிறது, ஆனாலும் அவர் கல்யாணம் செய்யாமல் இருக்கும் காரணம் இதுதான் என்று அவருடைய அம்மா கண்கலங்க பேசியிருக்கிறார்.
தெலுங்கு திரைப்பட நடிகரான பிரபாஸ் தமிழில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் இவருக்கு பெயர் கிடைத்தது. முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் 2004 ஆம் ஆண்டு வெளியான வருஷம் என்ற திரைப்படத்தில் மூலமாக பிரபாஸ் சினிமாவில் பிரபலமாகி இருக்கிறார்.

அதற்குப் பிறகு மிர்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பர்ஃபெக்ட் உட்பட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பாகுபலி ஒன்று மற்றும் பாகுபலி 2 இரண்டிலும் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. அதிகமாக தமிழ் திரைப்படங்களில் பிரபாஸ் நடிக்கவில்லை என்றாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறார்.
600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் கிட்டத்தட்ட 1200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதுபோல தெலுங்கு சினிமாவில் வசூல் நாயகனாக வளம் வரும் பிரபாஸ் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு தற்போது 45 வயதாகிறது. இப்ப வரைக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து அவருடைய அம்மா ஒரு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் பிரபாஸுக்கு ரவி என்கிற மிகவும் நெருக்கமான நண்பர் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை. மிகவும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனாலும் கடைசியில் கசப்புடன் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

இது பிரபாஸை ரொம்பவே பாதித்தது. இதனால் திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் இருக்குமோ? அது விரைவில் முறிந்து விடும் என்கிற எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதனாலேயே திருமணத்தில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தாலும் ஒரு நாள் பிரபாஸின் மனம் மாறும் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.
90ஸ் இளைஞர்கள் பலர் இன்னும் திருமணம் ஆகாமல் வரன் தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இவர் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம்.. என்பது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications