45 வயதாகியும் நடிகர் பிரபாஸ் கல்யாணம் செய்யாத காரணம் இதுதானா? கண்கலங்கி அம்மா சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் பிரபாஸ் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கும் அவருக்கு 45 வயதாகிறது, ஆனாலும் அவர் கல்யாணம் செய்யாமல் இருக்கும் காரணம் இதுதான் என்று அவருடைய அம்மா கண்கலங்க பேசியிருக்கிறார்.
தெலுங்கு திரைப்பட நடிகரான பிரபாஸ் தமிழில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் இவருக்கு பெயர் கிடைத்தது. முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் 2004 ஆம் ஆண்டு வெளியான வருஷம் என்ற திரைப்படத்தில் மூலமாக பிரபாஸ் சினிமாவில் பிரபலமாகி இருக்கிறார்.

அதற்குப் பிறகு மிர்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பர்ஃபெக்ட் உட்பட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பாகுபலி ஒன்று மற்றும் பாகுபலி 2 இரண்டிலும் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. அதிகமாக தமிழ் திரைப்படங்களில் பிரபாஸ் நடிக்கவில்லை என்றாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறார்.
600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் கிட்டத்தட்ட 1200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதுபோல தெலுங்கு சினிமாவில் வசூல் நாயகனாக வளம் வரும் பிரபாஸ் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு தற்போது 45 வயதாகிறது. இப்ப வரைக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து அவருடைய அம்மா ஒரு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் பிரபாஸுக்கு ரவி என்கிற மிகவும் நெருக்கமான நண்பர் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை. மிகவும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனாலும் கடைசியில் கசப்புடன் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

இது பிரபாஸை ரொம்பவே பாதித்தது. இதனால் திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் இருக்குமோ? அது விரைவில் முறிந்து விடும் என்கிற எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதனாலேயே திருமணத்தில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தாலும் ஒரு நாள் பிரபாஸின் மனம் மாறும் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.
90ஸ் இளைஞர்கள் பலர் இன்னும் திருமணம் ஆகாமல் வரன் தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இவர் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம்.. என்பது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications