வாத்தியார் அட்வைஸை மீறாத இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்! பிரபுதேவா அதிகமா சிரிக்காத காரணம் தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவாவின் பிறந்தநாள் இன்று தான்.
பிரபுதேவா என்னதான் வாழ்க்கையில் பெரிய அளவில் பிரபலமானாலும் அவர் அதிகமாக சிரிக்காததற்கு காரணம் அவருடைய மாஸ்டர் தானாம்.
நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என்று பல முகங்கள் இருக்கும் பிரபுதேவா பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கீழே வருகிறது.

பிரபு தேவாவின் ஆரம்ப காலம்
திரைப்பட நடிகராகவும், நடன அமைப்பாளராகவும், திரைப்பட இயக்குனராகவும் இருக்கும் பிரபுதேவா பிறந்தது 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மைசூரில் தானாம். பிரபுதேவா இந்த அளவிற்கு பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம் அவருடைய தந்தை சுந்தரர் தானாம். பிரபுதேவாவிற்கு ராஜசுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருடைய நடிப்பு மற்றும் நடனத்தை பலருக்கும் வெள்ளித் திரையில் பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள். அண்ணன் தம்பி மூன்று பேருமே சேர்ந்து கூட திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.

முதல் கனவு
நடிகர் பிரபுதேவா வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய முதலாவது நடனமே வெற்றி விழா திரைப்படத்தில் தானாம். இன்று வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். குறிப்பாக மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார்.

முதல் திரைப்படம்
டான்ஸ் மாஸ்டர் ஆகவும் ஒரு டான்ஸராகவும் இருந்த பிரபுதேவா முதல் முதலாக 1989 ஆம் ஆண்டு வெளியான இந்து என்ற திரைப்படத்தில் ரோஜாவோடு இணைந்து நடித்து முழு நேர கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். தான் ஒரு ஹீரோ மட்டுமல்ல இயக்குனர் என்று சொல்லும் அளவிற்கு போக்கிரி, வில்லு போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுவும் அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில்," ராஜா ராஜாத்தி" எனும் பாடலில் ஒரு குழுவில் ஆடும் நபராகத்தான் இவர் அறிமுகமாகி இருக்கிறார்.

நடன திறமை
சமீபத்தில் வெளியான பஹிரா அவரது 55 ஆவது படமாகும். அடுத்த ப்ளாஷ் பேக்,வுஃல்ப், என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக பிஸியாக ஓடிக்கொண்டிருந்தாலும், நடன இயக்குனராக வாய்ப்பு தேடி வந்தால் அதையெல்லாம் நான் விட்டு விட மாட்டேன் நானே வருகிறேன் என்று உடனே எந்த பாடலாக இருந்தாலும் அதிக பட்சம் மூன்று நாட்களுக்குள் அதற்கு நடனம் அமைத்துக் கொடுத்து விடுவது தான் இவருடைய ஸ்டைலாக வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

மெழுகு சிலை
ஆரம்பத்தில் நடன இயக்குனராக இவர் கலக்கி கொண்டிருக்கும்போது நடிகராக வாய்ப்பு வந்ததும், அதை டக்கென்று முட்டி கெடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து டைரக்ஷன் மீது இவருக்கு ஆசை வந்த காரணம் இவருக்கு பொறுப்பு எடுத்துக்கிறது ஒர்க் டென்ஷன் எல்லாம் ரொம்பவே பிடிக்குமாம் என்பதாலே இவர் இயக்குனராகவும் மாறி இருக்கிறார். மும்பையில் உள்ள lonavala wax மியூசியத்தில் இவருடைய மெழுகு சிலை இருக்கிறது.

தாடிக்கு காரணம்
இவர் எப்போதும் அதிகமாக தாடியோடு இருப்பதற்கு காரணம் பிரபுதேவா சின்ன வயசுலே டான்ஸ் மாஸ்டர் ஆகிட்டாதால் கொஞ்சம் தாடி இருந்தால் வயசு அதிகமாக இருப்பாங்கன்னு எல்லாரும் மதிப்பாங்கன்னு நினைச்சு தான் அப்பவே தாடி வச்சிக்க ஆசைப்பட்டாராம். அப்போ உனக்கு தாடி நல்லா இருக்குடா வைடா என்று இவர் அம்மா சொன்னதும் உடனே அதை இப்ப வரைக்கும் பின்பற்றி வருகிறாராம்.

சின்ன புன்னகை போதும்
அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் தன்னடக்கமாக சின்னதாக சிரிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம். முதல் முதலாக இவர் தேசிய விருது வாங்கியதும் அதை தனது பரதநாட்டிய மாஸ்டர் தர்மராஜிடம் சொல்லி சந்தோஷப்பட்டு இருக்கிறார். அதற்கு அவர் விருதுகள் எல்லாம் வரும் போகும், நீ உன் வேலையை சரியாய் செய் என்று கூறினாராம். அன்னையிலிருந்து எவ்வளவு பெரிய மகிழ்ச்சி கிடைத்தாலும் எல்லாவற்றுக்கும் சின்னதா புன்னகையோடு கடந்து போய்க் கொண்டிருக்கிறாராம்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications