வாடா போடான்னு பேசியதால் வந்த வினை! ரஜினி வெளிப்படையாக சொன்ன வார்த்தை.. ராதாரவி உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் ராதாரவி தான் முத்து திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினிகாந்த் குறித்து வாடா போடா எத பேசியதால் அசிஸ்டன்ட் டைரக்டர் தன்னிடம் சொன்ன வார்த்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு ரஜினிகாந்தின் கேரக்டர் குறித்தும் அந்த பேட்டியில் ராதாரவி மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக ஒரு திரைப்படத்தில் நாம் பார்க்க விஷயங்கள் உருவாக்குவதற்கு பல போராட்டங்களும் தடங்கல்களும் ஏற்பட்டிருக்கும். அதையும் மீறி தான் ஒரு சில காட்சிகள் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து விடுகிறது. ஒரு சில காட்சிகள் உருவாக்கும் போது நடிகர்கள் அல்லது நடிகைகளால் தடங்கல்கள் ஏற்பட்டு இருக்கும். அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பல வருடங்கள் கழித்து பேசும் போது தான் இப்படி எல்லாம் கூட நடந்து இருக்கா? என்று தெரியவந்திருக்கும்.

அந்த மாதிரி தான் முத்து திரைப்படத்தில் நடிகர் ராதாரவி ரஜினியோடு நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் ராதா ரவி பேசுகையில் நான் முத்து படத்தில் ரஜினிகாந்த்தை வாடா போடா என்று திட்டுற மாதிரி சீன் இருக்கும். அந்த படத்தில் நான் அவரை திட்டியதை பார்த்து அசிஸ்டன்ட் டைரக்டர் என்னிடம் வந்து சார் நீங்க இப்படி திட்டுவது நல்லா இல்ல..
ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் அவரை போய் நீங்க வாடா போடான்னு பேசுறீங்களே என்று கேட்க நான் இது உங்களிடம் யார் சொன்னா என்று கேட்டேன் அதற்கு அவர் இது நானாகத்தான் முடிவு எடுத்து பேசுகிறேன் என்று சொன்னார். அதற்கு நான் எப்படித்தான் பேச வேண்டும் என்று நீங்க சொல்லுஙக என்று கேட்டேன் அதற்கு அவர் வாயா பொய்யான்னு பேசலாம் என்று சொன்னார் .
உடனே நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினி இடம் போய் நான் உங்களை சீனில் வாடா போடான்னு திட்டுவதால் உங்களுக்கு எதுவும் வருத்தம் இருக்கிறதா? என்று கேட்டேன்? அவர் அப்படியெல்லாம் இல்லையே நீங்க தாராளமா பேசலாம் யாரு என்ன சொன்னா என்று கேட்க, நான் அசிஸ்டன்ட் டைரக்டர் சொன்னதை சொன்னேன் உடனே அவர் அவர் ஏதோ தெரியாம சொல்லி இருப்பார் ஆனால் நீங்கள் நீங்களாகவே இருங்கள் அதுதான் உங்களுக்கும் நல்லது படத்துக்கும் நல்லது என்று எனக்கு சப்போர்ட் செய்த பிறகு நான் படத்தில் தொடர்ந்து நடித்தேன்.
அதற்குப் பிறகு பல வருடம் கழித்து தான் படையப்பா திரைப்படத்திலும் நான் ரெண்டு பேரும் நடித்து இருந்தோம். பொதுவாக பெரிய நடிகர்களை அவமானமாக பேசினால் படம் சரியாக ஓடாமல் போய்விடுமோ என்று சிலர் நினைக்கிறார்கள். அதனால் தான் இப்படி எல்லாம் கூட பேசுகிறார்கள் என்று அந்த பேட்டியில் நடிகர் ராதாரவி பேசியிருக்கிறார்.
இதுபோல இன்னொரு பேட்டியிலும் சில மாதங்களுக்கு முன்பு ரஜினி குறித்து ராதா ரவி பேசி இருப்பார். அதில் அருணாச்சலம் படத்தை முதலில் வாசு இயக்க இருந்தபோது ராதா ரவிதான் வில்லனாக நடிக்கப் போவதாக இருந்ததாம். அந்த நேரத்தில் ராதா ரவி 4வதாக ஒரு கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு ரஜினிகாந்த் போன் செய்து உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூப்பிட ராதாரவியும் போயிருந்தாராம்.
அப்போது அருணாச்சலம் படத்தை இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கப் போகிறார். ஏற்கனவே இதில் மூன்று நடிகர்கள் வில்லன்களாக நடிப்பதாக இருக்கிறது. இதில் நீங்களும் இருந்தா நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன் என்று சொன்னார். அதற்கு பிறகு எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் நான் அருணாச்சலம் படத்தில் நடிக்காமல் போய்விட்டது என்று ராதாரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ராதா ரவி ரஜினிகாந்த் உடன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா படத்தில் அவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருக்கும். ஆரம்பத்தில் பணம் இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய தங்கச்சி குடும்பத்தை அவ்வளவு தாங்கும் ராதா ரவி பிறகு தன்னுடைய தங்கச்சி குடும்பத்தில் பணம் இல்லை என்பதை தெரிந்ததும் கேரக்டர் மாறுவது, பிறகு ரம்யா கிருஷ்ணன் படையப்பாவை தான் கல்யாணம் செய்வேன் என்று சொன்னதும் தன்னுடைய மகளுக்காக படையப்பாவை மாப்பிள்ளை கேட்டு தன்னுடைய தங்கையிடம் பேசுவது பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது என்று அந்த படத்தில் அவர் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.
-
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
ஆதவ் அர்ஜுனா கருத்தால் ரஜினிகாந்த் கோபம்.. காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என ஆவேச ட்வீட் -
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா! -
"ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில்"! தவெக பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா! -
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம் -
ரஜினி பயந்தாங்கோளி கிடையாது.. ஆதவ் அர்ஜுனா விளக்கம் தரணும்.. தவெக மேடையிலே கிளம்பிய எதிர்ப்பு -
Rajinikanth: அன்று காக்கா- கழுகு கதையால் விஜய்யை விமர்சித்த ரஜினி! நடந்தது என்ன? வைரலாகும் பழைய கதை! -
ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications