நடிகர் தனுஷ் மூலம் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுவரன்.. தோளில் கை போட்டு சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் ரகுவரன் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து, அவர் மறைந்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அவருடைய சகோதரர் நடிகர் ரகுவரன் பற்றி பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ரகுவரன் கடைசி நேரத்தில் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் எதற்காக நடித்தார் என்றும், நடிகர் தனுஷோடு என்ன பந்தம் என்றும் பேசி இருக்கிறார் அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவில் வில்லன் நடிகர்கள் என்றால் கட்டு மஸ்தான உடல் அமைப்பும், பெரிய மீசையும், மிரட்டும் பார்வையும், கரடு முரடான குரல் போன்ற இருந்தால்தான் வில்லன்கள் என்று இருந்த சமயத்தில் இந்த தகுதிக்கு எதிர்மறையாக ஒல்லியான தேகத்தோடு மீசை இல்லாத முகத்தில் ஆங்கில இந்தியன் போன்ற குரல் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக உயர்ந்தவர் தான் நடிகர் ரகுவரன்.
ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் டப் கொடுக்கும் வில்லன் கேரக்டராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த நடிகர் ரகுவரன் அதிகமாக ரஜினியோடு நடித்திருக்கிறார். விஜய், அஜித், அர்ஜுன், சரத்குமார் என்று பல முன்னணி நடிகர்களோடும் ரகுவரன் நடித்து அசத்தியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் படங்களில் எந்த கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரமாகவே நிஜத்திலும் மாறிவிடுவாராம். ஒரு கொடூர வில்லன் என்றால் வீட்டிலேயே கூட பல நேரங்களில் அப்படித்தான் இருப்பாராம். சைலண்டான கேரக்டரில் என்றால் அமைதியாக மாறி விடுவாராம். அந்த அளவுக்கு ஹோம் ஒர்க் செய்து தான் தன்னுடைய நடிப்பை திரையில் காட்டி இருக்கிறார்.

நடிப்பில் இவ்வளவு காதல் வைத்திருக்கும் நடிகர் ரகுவரனுக்கு நடிகை ரோகினி மீது காதல் வந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரகுவரனுக்கும் ரோகிணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் ரகுவரனுக்கு அவருடைய மகன் மீது அதிகமாக பாசம் வைத்திருந்தாராம்.
சனிக்கிழமை வந்துவிட்டால் தன்னுடைய மகனை ரகுவரினிடம் விட்டு செல்வாராம் ரோகிணி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தான் வந்து கூட்டிட்டு போவாராம். மகன் வரும்போது அப்பா என்று துள்ளிக் கொண்டு சந்தோசமாக வருவாராம். ஆனால் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. மகனை அழைத்து வரவே இல்லையாம் ரோகிணி. இது ரகுவரனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்து இருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் நடித்த கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் அவரை தேடி போயிருக்கிறார்.
அப்போது நடிகர் தனுஷ் தோலில் கையை போட்டு நீ பார்ப்பதற்கு என்னுடைய மகன் மாதிரியே இருக்க அதனால இந்த படத்தில் கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொன்னாராம். இந்த அளவிற்கு தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார் என்று நடிகர் ரகுவரனின் தம்பி பேட்டியில் பேசியிருக்கிறார். அத்தோடு ரகுவரன் நடித்த கடைசி திரைப்படத்தில் தன்னுடைய மகனோடு உள்ள பாசத்தை அப்படியே வெளிக்காட்டி இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். இப்போதும் பலர் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது ரகுவரனை மிஸ் பண்ணி கொண்டு தான் வருகிறார்கள்.
-
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications