நடிகர் தனுஷ் மூலம் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுவரன்.. தோளில் கை போட்டு சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் ரகுவரன் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து, அவர் மறைந்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அவருடைய சகோதரர் நடிகர் ரகுவரன் பற்றி பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ரகுவரன் கடைசி நேரத்தில் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் எதற்காக நடித்தார் என்றும், நடிகர் தனுஷோடு என்ன பந்தம் என்றும் பேசி இருக்கிறார் அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவில் வில்லன் நடிகர்கள் என்றால் கட்டு மஸ்தான உடல் அமைப்பும், பெரிய மீசையும், மிரட்டும் பார்வையும், கரடு முரடான குரல் போன்ற இருந்தால்தான் வில்லன்கள் என்று இருந்த சமயத்தில் இந்த தகுதிக்கு எதிர்மறையாக ஒல்லியான தேகத்தோடு மீசை இல்லாத முகத்தில் ஆங்கில இந்தியன் போன்ற குரல் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக உயர்ந்தவர் தான் நடிகர் ரகுவரன்.
ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் டப் கொடுக்கும் வில்லன் கேரக்டராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த நடிகர் ரகுவரன் அதிகமாக ரஜினியோடு நடித்திருக்கிறார். விஜய், அஜித், அர்ஜுன், சரத்குமார் என்று பல முன்னணி நடிகர்களோடும் ரகுவரன் நடித்து அசத்தியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் படங்களில் எந்த கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரமாகவே நிஜத்திலும் மாறிவிடுவாராம். ஒரு கொடூர வில்லன் என்றால் வீட்டிலேயே கூட பல நேரங்களில் அப்படித்தான் இருப்பாராம். சைலண்டான கேரக்டரில் என்றால் அமைதியாக மாறி விடுவாராம். அந்த அளவுக்கு ஹோம் ஒர்க் செய்து தான் தன்னுடைய நடிப்பை திரையில் காட்டி இருக்கிறார்.

நடிப்பில் இவ்வளவு காதல் வைத்திருக்கும் நடிகர் ரகுவரனுக்கு நடிகை ரோகினி மீது காதல் வந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரகுவரனுக்கும் ரோகிணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் ரகுவரனுக்கு அவருடைய மகன் மீது அதிகமாக பாசம் வைத்திருந்தாராம்.
சனிக்கிழமை வந்துவிட்டால் தன்னுடைய மகனை ரகுவரினிடம் விட்டு செல்வாராம் ரோகிணி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தான் வந்து கூட்டிட்டு போவாராம். மகன் வரும்போது அப்பா என்று துள்ளிக் கொண்டு சந்தோசமாக வருவாராம். ஆனால் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. மகனை அழைத்து வரவே இல்லையாம் ரோகிணி. இது ரகுவரனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்து இருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் நடித்த கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் அவரை தேடி போயிருக்கிறார்.
அப்போது நடிகர் தனுஷ் தோலில் கையை போட்டு நீ பார்ப்பதற்கு என்னுடைய மகன் மாதிரியே இருக்க அதனால இந்த படத்தில் கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொன்னாராம். இந்த அளவிற்கு தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார் என்று நடிகர் ரகுவரனின் தம்பி பேட்டியில் பேசியிருக்கிறார். அத்தோடு ரகுவரன் நடித்த கடைசி திரைப்படத்தில் தன்னுடைய மகனோடு உள்ள பாசத்தை அப்படியே வெளிக்காட்டி இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். இப்போதும் பலர் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது ரகுவரனை மிஸ் பண்ணி கொண்டு தான் வருகிறார்கள்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications