என் பணத்தை சுருட்டி ஏமாத்திட்டாங்க.. பொண்ணுக்கு நான் செஞ்ச தப்பு.. நடிகர் ராஜ்கிரண் எமோஷனல்
சென்னை: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய மனைவி மற்றும் மகளோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும்போது தன்னோடு இருந்தவர்கள் சிலர் தன்னை ஏமாற்றி பணத்தை சுருட்டி கொண்டுட்டு போயிட்டாங்க என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய மகளை தான் வெளி உலகம் காட்டாமல் வளர்த்ததால்தான் அவள் தப்பான முடிவை எடுத்து விட்டாள் என்று தன்னுடைய மகள் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்தது குறித்து மறைமுகமாக பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்த ராஜ்கிரண் தான் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்ப வரைக்கும் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமை ராஜ்கிரணுக்கு இருக்கிறது. இப்போது அதிகமான திரைப்படங்களில் ராஜ்கிரண் நடிக்கவில்லை என்றாலும் தான் நடிக்கும் ஒரு சில திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த வருடத்தில் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்த போது ராஜ்கிரண் குறித்தும் அவருடைய மனைவி குறித்தும் பேசியது இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு பிறகு ஒரு சில மாதங்களுக்குள் பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து வந்து விட்ட நிலையில் தன்னுடைய தந்தையிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதோடு தான் கஷ்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போது தன்னுடைய தந்தை நான் அவரை அவமானப்படுத்தியதையும் மறந்து தனக்கான உதவிகளை செய்து தன்னை பார்த்துக் கொள்கிறார் என்று அந்த நேரத்தில் பிரியா பேசியிருந்தார்.
இப்படியான நிலையில் இப்போது நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய மனைவி கதீஜா மற்றும் மகள் பிரியா உடன் தனியார் youtube சேனல் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பேசிய ராஜ்கிரண் நான் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றிருந்தாலும் அந்த நேரத்தில் நான் அவ்வளவு சம்பளம் வாங்கும் போது என்னோடு கூட இருந்தவர்கள் சிலர் என்னுடைய பணத்தை சுருட்டி கொண்டு ஓடிவிட்டார்கள்.
அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் தான் கதீஜா என்னிடம் வந்து சேர்ந்தார். அவரிடம் நான் சொன்னேன் எனக்கு கையில் பணம் கிடையாது, நிறைய கடன் இருக்கிறது என்று ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது என்று கதிஜா சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு நான் எவ்வளவு கஷ்டங்கள் பட்டாலும் அந்த நேரத்தில் எனக்கு துணையாக இருந்தவர் கதிஜா தான். அதுபோல என்னுடைய மகளுக்கு நான் வெளி உலகத்தை காட்டாமல் வளர்த்து விட்டேன். வீட்டுக்குள்ளேயே வச்சி வளர்த்துட்டேன். அதனால் தான் உலகம் தெரியல. அறியாமையால் தான் இந்த தவறு நடந்துட்டு. இப்போ என் பொண்ணு பாடம் படிச்சிட்டு திரும்பி வந்துட்டு... அவ்வளவு தான்.. என்று கண்ணீர் மல்க அந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications