முத்து படத்தில் நான் ரஜினியாக டூப்.. என் கோட்டை கழட்டிட்டு அவர் சொன்னது! ரமேஷ் கண்ணா எமோஷனல்
சென்னை: நடிகர் ரமேஷ் கண்ணா தான் உதவி இயக்குனராக இருக்கும்போது முத்து திரைப்படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த்க்காக தான் டூப் போட்ட போது ரஜினிகாந்த் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகிறது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இதற்கு கேமராவுக்கு பின்னாடி பல பேருடைய உழைப்பு இருக்கிறது. ஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்தை தான் நினைத்த மாதிரி இயக்க வேண்டும் என்றால் தன்னிடம் உதவி இயக்குனராக இருப்பவர்கள், நடிகர், நடிகைகள், பாடல் ஆசிரியர்கள் என்று எல்லோரையும் பாடாய்படுத்தி எடுத்து விடுவார்.

அவ்வளவு சிரமப்பட்டு பலர் உழைப்பிற்கு பிறகுதான் மக்கள் எதிர்பார்க்கிறபடி புதுவிதமான கதை அம்சத்தோடு ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகிறது. அதே நேரத்தில் அப்படி திரைப்படங்கள் உருவாக்கும் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். ஆனால் அது ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. அது பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சொன்னால் தான் தெரியும்.
அது போல தான் ரமேஷ் கண்ணா தான் உதவி இயக்குனராக இருக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
அதுபோல அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பார். அது மட்டும் அல்லாமல் ராதாரவி, சரத் பாபு, ரகுவரன், செந்தில், வடிவேலு என்று பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரிட் பாடல்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும். அதிலும் ஒருவன் ஒருவன் முதலாளி, தில்லானா தில்லானா, குழுவாயிலே, கொக்கு சைவ கொக்கு, விடுகதையா வாழ்க்கை போன்ற அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அனுபவங்கள் குறித்து தான் ரமேஷ் கண்ணா பகிர்ந்து இருக்கிறார். அதாவது இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இவருக்கு உதவி இயக்குனராக ரமேஷ் கண்ணாவும் இருந்திருக்கிறார். அப்போது ஒரு சீனில் ரஜினிகாந்த்க்கு டூப் போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதிலும் வயதான ரஜினிகாந்த் கோட்டில் வருவது போன்ற ஒரு காட்சியில் டூப் போட வேண்டும் என்று சொன்னதும் அதற்கு ஆள் இல்லாமல் இருந்திருக்கிறது.
உடனே அந்த கோட்டை போட்டுக்கொண்டு ரமேஷ் கண்ணா ரஜினி போல ரெடியாகி நடித்து விட்டாராம். பிறகு வந்த கே எஸ் ரவிக்குமார் அடுத்து ஷார்ட் ரஜினிக்கு வைக்க வேண்டும் அவருக்கு கோட் வேணும் என்று சொல்ல, அங்கு வேறு கோட் இல்லை என்பதை தெரிந்ததும் ரமேஷ் கண்ணா அதிர்ச்சி ஆகி இருக்கிறார். உதவி இயக்குனர் என்பதன்ஓடி ஓடி வேலை செய்ததால் உடம்பெல்லாம் வேர்வையாக இருக்க அந்த கோட்டிலும் வேர்வையாக இருந்திருக்கிறது.
இதை எப்படி ரஜினியிடம் கழட்டி கொடுக்க என்று பயந்து போன ரமேஷ் கண்ணா அந்த கோட்டை உடை வடிவமைப்பவரிடம் கொடுத்து இதில் ஸ்பிரே போடு, இல்லன்னா காய வைத்து ஏதாவது செஞ்சு ரெடி பண்ணு ரஜினி சார் வேற ரெடியா இருக்காரு என்ன பண்ணனும்னு தெரியல என்று அவசரப்படுத்த பின்னாடியே ரஜினி நின்று கொண்டிருந்திருக்கிறார்.
ரஜினி என்ன ஆச்சு என்று கேட்க, இல்லை சார் நான் உங்களுக்கு டூப் போட்டேன். இந்த கோட் எல்லாம் வேர்வையாய் இருக்கு என்று சொல்ல அது இருக்கட்டும் கொடுங்க என்று அந்த கோட்டை அப்படியே வாங்கி அவர் போட்டுவிட்டு நடித்து விட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா ரஜினி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications