நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந்த பெண்.. காரை விட்டு ஓடி சென்று உதவிய ரஞ்சித்.. நெகிழ வைத்த காட்சி
சென்னை: பல்லடம் காமநாயக்கன்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் மயக்கம் போட்டு விழுந்த நிலையில் அந்த பக்கமாக சூட்டிங் முடித்துவிட்டு பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நடிகர் ரஞ்சித் காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
நடிகர் ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கவுண்டம்பாளையம் திரைப்படம் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கி இருக்கிறது. இவர் பேசும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் பேசும் பொருளாகி கொண்டிருக்கிறது. இவருடைய திரைப்பட கதை குறித்து கூட ஒரு சிலர் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் அவருடைய திரைப்படம் மற்றும் அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டார். பாக்கியாவிற்கு எப்போதெல்லாம் பிரச்சனையோ அங்கு உடனே ஓடி வருவது பழனிசாமி ஆகத்தான் இருக்கும். பழனிச்சாமி கேரக்டரில் நடிகர் ரஞ்சித் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சின்னத்திரையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் செந்தூரப்பூவே சீரியலிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் ரஞ்சித் ஷூட்டிங் முடித்துவிட்டு பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி காரில் சென்று கொண்டிருக்கும் போது பல்லடம் காமநாயக்கம்பாளையத்தில் தன்னுடைய கணவரில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார்.

அப்போது அதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய காரை விட்டு இறங்கி ஓடி சென்று அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை அடித்து எழுப்பி பார்த்திருக்கிறார். ஆனாலும் அந்த பெண் மயக்கத்தில் இருக்க உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் அவரை ஏற்றி செல்வது வரைக்கும் அந்த இடத்திலேயே இருந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அதுபோல ரஞ்சித் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தபோது அந்தப் பெண் எழுந்திருக்காமல் இருந்தபோது அந்த பெண்ணின் புடவை நழுவி செல்ல அதை ரஞ்சித் சரி செய்து இருக்கிறார். அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் பலர் ரஞ்சித்தை பாராட்டி வருகிறார்கள். ஒரு சிலர் வழக்கம் போல இதையும் கலாய்த்து வருகிறார்கள்.
பலர் சாலைகளில் விபத்து ஏற்பட்டால் கண்டும் காணாதது போல போய்விடும் நிலையில் ரஞ்சித் தன்னுடைய காரை விட்டு ஓடி வந்து அந்த பெண்ணிற்காக செய்த செயல் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மனிதநேயம் உள்ள எவராக இருந்தாலும் இதைத்தான் செய்வார் என்றாலும் ரஞ்சித்தின் பெருந்தன்மையான செயலைக் குறித்து பலர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications