Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sanjeev: நண்பன் விஜய்யுடன் நடித்தும் கைகூடாத கனவு! "அந்த வலி” இன்னும் இருக்கு! கண்ணீர் மல்க பேசிய சஞ்சீவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா உலகில் வாரிசுகளாக வருபவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை; அதேசமயம் சினிமா பின்புலமே இல்லாமல் உச்சம் தொடுபவர்களும் உண்டு. அந்த வகையில், பெரிய சினிமா பின்புலம் இருந்தும், தனது சினிமா கனவு நிறைவேறவில்லையே என்றுத் தற்போதும் வருத்தத்துடன் இருப்பவர், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்.

சின்னத்திரை ரசிகர்களிடையே மிகப்பிரபலமாக அறியப்பட்டாலும், வெள்ளித்திரையில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என்ற தனதுக் கனவை பற்றி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கண்ணீர் மல்க பேசியது பலரையும் உருக வைத்துள்ளது.

Sanjeev Vijay

சஞ்சீவின் சினிமா பின்புலம்

பலருக்கும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடிகர் விஜய்யின் லயோலா கல்லூரி நண்பர் என்பது மட்டுமே தெரியும். ஆனால், அவரதுப் பின்னணி மிகவும் ஆழமானது. சஞ்சீவ், நடிகர் விஜயுடன் மிகவும் நெருக்கமான 'வாடா போடா' நண்பர்கள். விஜய்யுடன் 'நிலாவே வா' உள்ளிட்டப் பலப் படங்களில் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

குடும்பப் பின்னணி

இவரின் அக்கா, நடிகை சிந்து, 'இணைந்த கைகள்' உள்ளிட்டப் பலப் படங்களிலும் மெட்டிஒலி சீரியல் உட்பட பல சீரியல்களிலும் நடித்தவர். ஆனால், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுச் சிறு வயதிலேயே அவர் இறந்து போனார். மேலும், தமிழ் சினிமாவின்ப் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளாவின் சகோதரி மகன்தான் சஞ்சீவ் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இவ்வளவு பெரிய சினிமாப் பின்புலம் இருந்தும், இவரால் வெள்ளித்திரையில் சோபிக்க முடியவில்லை.

சின்னத்திரையின் சஞ்சீவ்

சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், சஞ்சீவ் சின்னத்திரை பக்கம் திரும்பினார். அங்கே அவர் ஒரு அசைக்க முடியாத நடிகராகவே மாறினார். 'திருமதி செல்வம்' சீரியல் இவரைச் சீரியல் ரசிகர்களிடம் அமோகமாகப் பிரபலப்படுத்தியது. அதன்பின் 'மெட்டி ஒலி', 'நம்பிக்கை', 'அண்ணாமலை', 'அவர்கள்', 'அகல்யா', 'மனைவி' உள்ளிட்டப் பல சீரியல்களிலும் 23 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.

நிறைவேறாத கனவின் வலி

கிட்டத்தட்ட 23 வருடங்களாகச் சீரியலில் நடித்து வந்தாலும், சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை என்கிற கவலை இன்றும் சஞ்சீவிடம் ஆழமாக இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சீவ், தனது இளம் வயதுக் கனவு பற்றி உருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்: "இப்போது சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால், இளம் வயசுல எனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்கலை. அதை நினைச்சு நிறையத் தடவை கண்ணாடி முன்னாடி நின்னு அழுதிருக்கேன்."

அம்மா, அப்பாவின் ஆசை

"நான் சினிமாவுல ஒரு பெரிய நடிகனா வருவேன்னு என் அம்மாவும் அப்பாவும் ஆசைப்பட்டாங்க. ஆனால், அது அவங்க சாகுற வரைக்கும் நடக்காமலே போயிடுச்சு. அவங்க ஆசையை நிறைவேற்ற முடியலைங்கிற வருத்தமும், கவலையும், வலியும் இப்பவும் எனக்கு இருக்கு" எனக் கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.

சஞ்சீவ், 'நிலாவே வா' படத்தில் விஜய்யுடன் நடித்தப்போ, 'நீ நல்ல நடிகனா வருவே'ன்னு அவரோட அம்மா சொன்ன அந்த வார்த்தை, அவருக்குச் சினிமா கனவைப் பற்றிக்கொள்ள ஒரு நம்பிக்கையை அளித்தது. ஆனால், அந்த நம்பிக்கை நிஜமாகாமல் போனதுதான் இன்றும் அவரது மனதில் ஆறாதக் காயமாக இருக்கிறது. இத்தனை வருட போராட்டத்திற்குப் பிறகு, இப்போது சஞ்சீவுக்கு நல்ல சினிமா வாய்ப்புகள் வருவது, காலம்கடந்து அவருடையக் கனவு நனவாகப் போகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+