சசிகுமாருக்கு வந்த சோதனை! மதுரையில் திடீரென சூட்டிங்கை நிறுத்திய போலீஸ்! காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. சமீப காலமாகவே அவர் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் வெப் சீரிஸின் ஷூட்டிங் மதுரையில் நடந்த போது திடீரென்று போலீஸ் நிறுத்தி இருக்கிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில திரைப்பட நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு பெற்று வருகிறது. கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் பார்த்து பார்த்து சில நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சிலர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகர் சசிகுமார் சமீப காலமாக கதை தேர்வில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

சசிகுமார் திரைப்படங்கள்
நடிகராக வேண்டும் என்ற கனவோடு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த சசிகுமாருக்கு ஆரம்பத்தில் இயக்குனராகத்தான் வாய்ப்பு கிடைத்தது. உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி, இயக்குனராகவும் மாறி இருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய திரைப்படத்தில் தானே கதாநாயகனாகவும் நடித்து வந்தார். அவருடைய கிராமப்புற கேரக்டர் மக்கள் மனதில் பதிந்து விட்டது. சுப்பிரமணியபுரம் நாடோடிகள் திரைப்படங்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் மக்களை கவரவில்லை.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி
அதற்கு காரணம் அவர் தன்னுடைய கடன் காரணமாக வந்த வாய்ப்புகள் எல்லாம் ஓகே சொன்னது தான் என்று ஒரு இன்டர்வியூவில் சசிகுமார் சொல்லி இருந்தார். ஆனால் இனி நான் தேர்ந்தெடுக்கும் படங்கள் நல்ல கதை அம்சம் உள்ளதை தான் எடுப்பேன் என்று சொல்லி இருந்தார். அதேபோல இப்போது சில வருடங்களாக சசிகுமார் தேர்வு செய்யும் கதை மக்கள் மனதை தொடுகிறது.

சசிகுமார் வெப் சீரிஸ்
அதிலும் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் கிட் அடித்து விட்டது. இப்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் வெப் சீரிஸ் ஷூட்டிங் நேற்று மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் நடைபெற்றிருக்கிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பொதுவாக அதிகமான வாகனங்கள் வந்து போகும். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
சூட்டிங் நிறுத்தம்
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் சசிகுமார் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் இன் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சூட்டிங் உபகரணங்களை வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த போலீஸ் சூட்டிங்கை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. காரணம் சூட்டிங்க்கு முறையான அனுமதி வாங்கவில்லையாம். பிறகு பட குழுவினர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு சூட்டிங் தொடங்கி இருக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications