சூப்பர் சிங்கரில் மாகாபா பிரியங்காவை ஓபனாக தாக்கி பேசிய சசிகுமார்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் நடிகர் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது மாகாபா மற்றும் பிரியங்கா பற்றி சசிகுமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா மற்றும் மாகாபாவை நிகழ்ச்சியில் ஓபனாக சசிகுமார் தாக்கி பேசியிருக்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். ஆனால் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கடந்த வாரத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சசிகுமார் தான் பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்.

Vijay TV Priyanka

சூப்பர் சிங்கர் சக்சஸ்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் இப்போது ஜூனியர்களுக்கான பத்தாவது சீசன் நடந்தபட்டு வருகிறது. இதில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராகத்தான் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டிருக்கிறார். சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சசிகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சசிகுமார் வருத்தம்

அப்போது பிரியங்கா தன்னை போல சிரிப்பதாக சொல்லி ஏதோ ஒரு சிரிப்பை சிரித்துக் கொண்டிருக்கிறார் அவரால் நான் வெளியே போகும் இடங்களெல்லாம் என்னிடம் அதே போல சிரிக்க சொல்லி ரசிகர்கள் கேட்கிறார்கள் என்று பிரியங்கா தலையில் சசிகுமார் ஓங்கி குட்டு வைத்திருந்தார். அதைத்தெடர்ந்து சசிகுமார் அங்கிருந்த பாடகர் ஒருவரிடம் பேசும் போது நீங்க எவ்வளவு அழகாக பாடுகிறீர்கள்? ஆனால் தயவுசெய்து இந்த ராமருக்கு எல்லாம் வாய்ஸ் ஓவர் கொடுக்காதீங்க. உங்களுடைய திறமை வெளியே வரணும் என்று பாராட்டி பேசி இருந்தார்.

சசிகுமார் சொன்ன வார்த்தை

அப்போது பிரியங்கா சார் நீங்க உண்மையிலேயே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாக்கறீங்களா என்று கேட்க, நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே நான் ஒவ்வொரு வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பேன். பல சீசன்களாக தொடர்ந்து பார்த்துட்டு வரேன் ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்த பலர் மாறி போய்ட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இன்னும் இருந்துட்டு இருக்கீங்க அதுக்காக வாழ்த்துக்கள் என்று சொல்லி இருந்தார்.

சசிகுமாரின் திறமை

இதை இணையத்தில் பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். மாகாபா மற்றும் பிரியங்கா மட்டும் எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு பல வருடங்களாக இதே நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று சசிகுமார் கூறிவிட்டார், என்று பிரியங்கா மாகாபாவை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சசிகுமார் கிட்டார் வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார். அது தனக்கு சொல்லிக் கொடுத்தது இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தான், அவர்தான் ஒரு நிகழ்ச்சியில் என்னை கிட்டார் வாசிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார் அதற்கு பிறகு எப்படி வசிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தார் என்று கூறியிருந்தார்.

உங்க கருத்து

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் பைனலுக்கு போவதற்காக போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இதில் எந்த பாடகர் டைட்டில் வெற்றி பெற்றால் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+