Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஜா படத்தில் நடிக்காத காரணம்! வெளிப்படையாக சாந்தனு பதிவு.. 10 வருடம் முன்பே இப்படி நடந்ததா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற மகாராஜா திரைப்படத்தில் முதலில் நடிகர் சாந்தனு தான் நடிக்க இருந்தார், ஆனால் பிறகு அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று அந்த திரைப்பட இயக்குனர் சொல்லி இருந்த நிலையில் தான் எதற்காக அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது பற்றி நடிகர் சாந்தனு திடீர் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாக திரைத்துறையில் பல நடிகை, நடிகர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாரிசுகள் அவர்கள் போல வெற்றி பெற முடியவில்லை. என்ன தான் திறமையும் அதற்கு ஏற்ற உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வெற்றிகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு.

Television

நடிகர் பாக்கியராஜின் ஒரே மகனான சாந்தனு பாக்கியராஜ் இயக்கிய சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் தன்னுடைய அப்பா போலவே சினிமாவில் பெரிய அளவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருக்கிறது.

பல ஹிட் படங்களில் ஏதாவது ஒரு காரணத்தால் சாந்தனு நடிக்க முடியாமல் போய்விட பிறகு வேறு ஒரு நடிகர்கள் நடித்த அந்த படம் பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சுப்பிரமணியபுரம் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் முதலில் சாந்தனு நடிப்பதற்காக கேட்டபோது அந்த படத்தின் கதையை கேட்டு பாக்கியராஜ் இது சாந்தனுவிற்கு சரியாக இருக்காது என்று மறுத்துவிட்டதாகவும் பிறகுதான் நடிகர் ஜெய் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

Television

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தின் கதை 10 வருடங்களுக்கு முன்பே நடிகர் சாந்தனுவிடம் இயக்குனர் நித்திலன் சொல்லி இருந்தேன் என்று சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார். நான் இந்த படத்தில் சாந்தனுவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் சில காரணங்களால் அப்போது படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது என்று அவர் பேசி இருந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சாந்தனு தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

Television

அதில் மகாராஜா போல ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. நான் முதலில் இந்த கதையை தேர்வு செய்தேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தை நான் மிஸ் செய்வதற்கு காரணம் என்னுடைய அப்பாவோ, நானோ அல்ல. இயக்குனர் என்னிடம் கதை வந்து சொன்னது என்னுடைய அப்பாவுக்கே தெரியாது என்றும் தயாரிப்பு நிறுவனம் யாரும் அந்த கதைக்கு அந்த நேரத்தில் ரிஸ்க்கு எடுக்க விரும்பவில்லை அதனால் தான் படம் எடுக்க தாமதம் ஆகிவிட்டது.

ஆனால் இப்போது நல்ல கன்டென்ட்டை புரிந்து கொள்ள பலரும் தொடங்கி இருக்கிறார்கள். அதுவே சந்தோஷம். அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு நடந்ததை நித்திலன் மறக்காமல் இப்போது பேட்டியில் பேசி இருக்கிறார் அதுவும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். நித்திலன் இது பற்றி சொல்லும்போது நானும் சாந்தனுவிடம் இந்த படத்தின் கதையை 10 வருடங்களுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன்.

Television

அப்போது பல தயாரிப்பாளர்களிடம் சாந்தனு பைக்கில் என்னை கூட்டிக்கொண்டு போனார். ஆனால் அப்போது யாரும் அந்தப் படத்தை எடுப்பதற்கு தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+