Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sivakumar: என் நிஜ பெயரே வேற.. ஏவிஎம் சரவணன் பெயரை தான் என் மகனுக்கு வைத்தேன்! கலங்கிய நடிகர் சிவகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தின் அனைத்துப் பணிகளையும் நிர்வகித்து வந்த திரு. ஏ.வி.எம் சரவணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 86 வது பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்படப் பல அரசியல் பிரபலங்களும், திரைக் கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தி விட்டு தன்னுடைய நிஜப் பெயரை மாற்றி வைத்த சரவணன் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்

Actor Sivakumar AVM Saravanan

நடிகர் சிவகுமாரின் அஞ்சலி

அந்த வகையில், நடிகர் சிவகுமார் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது ரசிகர்களை உருக்கியது. 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தப் பெயர் பழனிசாமி. அந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார் தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிவகுமார்.

நினைவு பெயர்

அவரின் நியாபக அர்த்தமாகத் தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன் என்று கூறினார். என்னுடைய முதல் படத்துல நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போ சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம்' என்று சொன்னார்.

நம்பிக்கை கொடுத்தது அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று என்று அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

அடுத்த தலைமுறைக்கும் ஆதரவு

என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு பேரழகன், அயன் படங்களைக் கொடுத்தார்கள் - இரண்டுமே வெற்றிப் படங்கள் தான். சூர்யா வாழ்வில் மறக்க முடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள் என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

ஏ.வி.எம் நிறுவனம் பற்றி சிவகுமாரின் பெருமிதம்

ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்படப் பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் என்று ஏ.வி.எம் நிறுவனத்தின் பெருமையைச் சொன்னார்.

"88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என்று முடித்தார்.

Actor Sivakumar AVM Saravanan

நடிகர் ரஜினிகாந்தின் அஞ்சலி

நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திப் பேசினார்: ஏ.வி.எம் சரவணன் மிகப் பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எப்போதும் வெள்ளைத் டிரஸ் போட்டிருப்பார். அதே போல அவர் உள்ளமும் வெள்ளையாக இருக்கும்.

சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். பத்து நிமிடம் அவரிடம் பேசினால் 'அப்பாச்சி அப்பாச்சி' என அவரது தந்தையை (மெய்யப்பச் செட்டியார்) நினைவு கூறுவார். ஏ.வி.எம் நிறுவனத்தில் நான் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அந்த ஒன்பது படங்களுமே பெரிய ஹிட். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார் என்றால் அது மிகை ஆகாது.

80-களில் மிகப் பெரிய பிரமாண்டப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 'முரட்டுக் காளை'அதேபோல் 20-களில் பிரமாண்டப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 'சிவாஜி'. அப்படிப்பட்ட பொருட்செலவில் இப்போதும் ஒரு பிரமாண்டப் படத்தை எடுக்க நினைத்தார். அது நடக்காமலே போய்விட்டது" என்று வருத்தம் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+