சஞ்சீவ் என் நண்பன்! ஆனால் இந்த விஷயத்தால் தான் பிரச்சனை.. போன் பண்ணி சொன்ன வார்த்தை.. ஸ்ரீ எமோஷனல்
சென்னை: சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தன்னுடைய பல வருட நண்பரான சஞ்சீவ் உடன் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு தான் செய்த செயல் சஞ்சீவை எப்படி பாதித்தது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீ சின்னத்திரையில் பலருக்கும் பரீட்சையமானவர் தான். ஆரம்பத்தில் சிவசக்தி, அகல்யா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதோடு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், கமல்ஹாசன் நடித்த விக்ரம் போன்ற பல படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களில் சின்ன சின்னதாக இவருடைய காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம் பிடித்தாலும் அது அழுத்தம் உள்ள கேரக்டராக இருக்கிறது. அதுபோல சின்னத்திரையில் ஒரு சில நடிகர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இணைந்து பேட்டி கொடுப்பதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீ மற்றும் சஞ்சீவ் இருவரும் பல பேட்டிகளில் ஒன்றாக பேசியிருக்கிறார்கள்.
இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். நடிகர் சஞ்சீவ், விஜய் போலவே ஆக்டிங் செய்கிறார் என்று அதிகமாக ட்ரோல்களில் சிக்கி வருகிறார். அதுபோல பேட்டிகளில் கூட அவரிடம் விஜய் பற்றி எதையாவது கேட்கும்போது தன்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் விஜய் எப்படி நடந்து கொண்டார், எப்படி பழகுவார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதுவும் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஸ்ரீ கருத்து தெரிவித்திருந்தார். அதில் சஞ்சீவ்விடம் நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன் டேய் நீ விஜய் போல பண்ணாத, விஜய் பற்றி எந்த பேட்டியும் பேசாத ஆரம்பத்தில் நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இப்போ அதை பேசுவதால் அவரை வைத்து நீ பிரபலம் தேடுவேன்னு நினைப்பாங்க என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் அவன் கேட்கல என்று விளையாட்டாக சஞ்சீவ் பேசியிருந்தார்.

இது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி நடிகர் ஸ்ரீ பேசுகையில் நானும் ஸ்ரீயும் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். ஆனாலும் நான் அந்த பேட்டியில் அப்படி பேசி இருக்கக் கூடாது. நண்பர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அவரிடம் நேரடியாக நான் சொல்லி இருக்கணும்.
ஆனால் அன்றைக்கு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வேகத்தில் அதைச் சொல்லிவிட்டேன். அது அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எனக்கு பிறகு தோன்றியது அதனால் அவனிடம் போன் செய்து நான் மன்னிப்பு கேட்டேன். அவனும் பரவாயில்லை என்று சொன்னான். ஆனால் நான் எதுவா இருந்தாலும் அவன் முகத்துக்கு நேராக பேசியிருக்க வேண்டும் என்று எனக்கு பிறகு கஷ்டமாக இருந்தது. அவனுமே அதை பெருசா எடுத்துக்கல என்று ஸ்ரீ விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications