காதலித்து தான் அந்த நடிகையை கல்யாணம் பண்ணினோம்.. ஆனால் பிரிஞ்சிட்டோம்! நடிகர் சுரேஷ் எமோஷனல்
சென்னை: நடிகர் சுரேஷ் தன்னுடைய காதல், திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் திருமண வாழ்க்கை நிலைக்காமல் விவாகரத்து ஆகிவிட்டது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த சுரேஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்திருக்கிறார். ஆனால் சில வருடங்களாக தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்து வந்து சுரேஷ் சில வருடங்களுக்கு முன்பு அசல் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாகவும், தலைவா படத்தில் போலீஸ் ஆபீஸராகவும் நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில், நான் என்னுடைய வாழ்க்கையில் சில தவறுகளை செய்திருக்கிறேன். அதில் திருமணமும் ஒன்று. நான் நடிகை அனிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவரும் நானும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறோம். தமிழிலும் தெலுங்கிலும் அந்த படம் வெளியானது. அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்யலாம் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் அப்பா திருமணம் செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்தியதால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் சில வருடங்களில் எங்களுக்குள் புரிதல் இல்லாமல் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த திருமண வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு நல்லது நடந்தது.. என்னுடைய மகன் கிடைத்தார்.

என்னுடைய மகன் இப்போது வெளிநாட்டில் தான் வசித்து வருகிறார். அவருக்கு நடிப்பில் விருப்பம் கிடையாது. அவருடைய மனைவியும் வெளிநாட்டு பெண் தான் அதனால் அவர் குடும்பத்தோடு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்று சுரேஷ் கூறியிருக்கிறார்.
அதோடு சுரேஷின் தந்தை எம்எஸ் கோபிநாத் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் 34 படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறார். நடிகர் சுரேஷ் 80ஸ் காலகட்டத்தில் இறுதியில் சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தாலும் 90ஸ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுரேஷுக்கு அந்த நேரத்தில் அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கிடைத்தது.

அதே நேரத்தில் சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முன்பு 7 தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து இருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் ஆறு சீசன்களாக தொகுத்து வழங்கி இருந்தார். இப்போது அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு அவருடைய தற்போதைய நிலை அதிர்ச்சியை கொடுத்திருக்கும். ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த சுரேஷ் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications