ராஜ்கிரண் எனக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள்.. ஆனால், நான் ஒன்னும் ‘சும்மா’ வரல! கோபத்தில் பேசிய வடிவேலு
சென்னை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு நடிகர் ராஜ்கிரண் தனக்கு செய்த உதவி குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். அதோடு இவர்கள் இருவரும் பிரிந்தது குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
பொதுவாக பலருக்கு உழைப்பும் திறமையும் இருந்தாலும் ஒரு சிலருக்கு தான் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு சிலர் இன்று புகழின் உச்சத்தில் இருந்தாலும் அவர்களுடைய ஆரம்ப காலம் வலிகளும் அவமானங்களும் நிறைந்ததாக தான் இருக்கிறது. அதுபோல ஒருவர் தான் நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் பல நடிகர்களுடன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். செந்தில் கவுண்டமணி காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் 90s காலகட்டத்தில் இவர் இல்லாத படங்கள் இருக்கிறதா என்று கைவிட்டு எண்ணும் அளவிற்கு மாறிவிட்டார். பல முன்னணி நடிகர்களோடு நண்பனாக நடித்து வந்த வடிவேலு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

மீண்டும் நடிப்பு
சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த வடிவேலு, இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் அடிக்கடி வடிவேலு பற்றி சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது. அவரோடு ஒன்றாக நடித்தவர்களே அவர் பற்றி தவறாக பேசி வருகிறார்கள். தன்னை பற்றி தவறாக பேசுபவர்கள் மீது வடிவேலு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
வடிவேலு பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் நீயா நானா கோபிநாத் தான் வடிவேலுவிடம் கேள்வி கேட்கிறார். அப்போது அவர் நடிகர் ராஜ்கிரணுக்கும் உங்களுக்குமான நட்பை பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நீங்கதான் நான் ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்த பதிலுக்கு சரியான கேள்வியை கேட்டு இருக்கீங்க. இப்போ நான் உண்மையை சொல்லியே ஆகணும் என்று கூறியிருக்கிறார்.
முதல் திரைப்படம்
வடிவேலு ராஜ்கிரணுடன் முதன்முதலாக நடித்த படம் ராசாவின் மனசிலே தான். ஆனால் அதுக்கு முன்பே டி ராஜேந்திரனின் என் தங்கை கல்யாணி படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் அது அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. முதல் முறை ராஜ்கிரணை தன்னுடைய தம்பியின் நண்பர் மூலமாகத்தான் வடிவேலு சந்தித்தாராம். அப்போது ஒரு நாள் முழுக்க ராஜ்கிரணுடன் வடிவேலு பேசிக்கொண்டே இருந்தாராம்.
ராஜ்கிரண் தான் அடையாளம்
பிறகு ராஜ்கிரண் ஊருக்கு கிளம்பி போயிருக்கிறார். இரண்டு மாதங்கள் கழித்து ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு பிறகு நான்கு வருடங்கள் ராஜ்கிரண் அலுவலகத்தில் தான் வடிவேலு இருந்தாராம். ராஜ்கிரணின் போன் நம்பர் முகவரியை தான் ஆடிஷன் போகும் எல்லா இடங்களிலும் கொடுத்து இருக்கிறார்.
தேவர் மகன் சம்பவம்
வடிவேலுக்கு ராஜ்கிரண் தான் இருப்பிடம் கொடுத்திருக்கிறார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்திற்கு பிறகு ஆர்.வி உதயகுமாரிடம் தொடர்ந்து பத்து படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் சின்ன கவுண்டர், தேவர் மகன், கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் ஒரு திருப்பத்தை கொடுத்தது தேவர் மகன் திரைப்படம் தானாம்.
பிரிவிற்கான காரணம்
அதுவரைக்கும் ராஜ்கிரண் அலுவலகத்தில் தான் வடிவேலு தங்கி இருந்திருக்கிறார். ஆனால் தனக்கு ராஜ்கிரண் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை, கூடவே இருந்து பார்த்துக் கொண்டார் அதிலிருந்து நான் ராஜ்கிரணிடம் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பி வந்தேன். ஆனால் ஊரில் இருந்து வரும்போது நான் வேட்டி சட்டையோடு தான் வந்தேன், அம்மணமாக வரவில்லை. ஆனால் சிலர் பேசும் போது வேட்டி, சட்டை வாங்கி கொடுத்தாரு தாலாட்டுனாரு, ஊட்டுனாரு என்று எல்லாம் சொல்றாங்க. அப்படி கிடையாது.
ராஜ்கிரண் பற்றி விளக்கம்
ராஜ்கிரண் சார் தான் எனக்கு கடவுள். அவர்தான் எனக்கு அச்சாரம் போட்டார். ஆனால் அதற்குப் பிறகு நான் இப்போ இவ்வளவு வளர்ந்து வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய முயற்சியும் இருக்கிறது. நான் இன்று சுந்தர் சி வரைக்கும் பல இயக்குனரை பார்த்து விட்டேன் ஆனால் நான் நன்றி மறக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications