Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நதியா அந்த வார்த்தை சொல்லும்போது.. 400 ரூபாய் தான் சம்பளம்.. விஜய் சேதுபதி பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித்திரை, சின்னத்திரை என்று கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தான் முதல் முறையாக பார்த்த ஹீரோ ஜெயம் ரவி தான் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

பலருக்கும் சரியான திறமையும் உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் மட்டும் அமைவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு தங்களுடைய திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Television Vijay Sethupathi Sun TV

ஆரம்பத்தில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் பத்தோடு ஒன்றாக நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என்று பல முன்னணி நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய வளர்ச்சி அபரிமிதமாக இருந்தாலும் அவருடைய திறமையையும் அதற்கு தகுந்த மாதிரி தான் இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து விஜய் சேதுபதி எந்த இடத்திலும் மறக்கவில்லை.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களிடமும் இயல்பாக பழகும் விஜய் சேதுபதி தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் விஜய் சேதுபதி பேசுகையில் நான் நடித்த முதல் படத்தில் 200 ரூபாய் சம்பளம் தந்தாங்க. அதற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் s/o மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

1 கோடி கொடுத்தாலும் அதை நான் பண்ண மாட்டேன்.. நினைச்சாலே பயமாயிருக்கு! ஆனால் என் மகன்! வனிதா எமோஷனல்
அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு 400 ரூபாய் சம்பளம் தந்தாங்க. எனக்கு அது மிகப்பெரிய இன்கிரிமெனட் மாதிரி தெரிந்தது. அதிலும் அந்த படத்தில் நடிக்கும் போது நீங்க ஜிம்பாய் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சொல்வது ஏதோ நமக்கு ஒரு பெரிய கேரக்டர் கிடைக்கப்போகுது என்று நான் நினைத்திருந்தேன். அந்த படத்தில் நதியா மேடம் ஒரு இடத்தில் எனக்கு சிங்க குட்டி மாதிரி ஒரு மகன் இருக்கான்டா என்று சொல்லுவாங்க. அதுதான் ஜெயம் ரவி அறிமுகமாகும் காட்சியாக இருக்கும்.

அந்த இடத்தில் நான் நதியா மேடத்திற்கு பின்பக்கத்தில் இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்த ஹீரோ என்றால் ஜெயம் ரவி தான். அவருடைய திரைப்படங்கள் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி நான் உண்மையில் பல வருடங்களாக என்னுடைய மனதில் இருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.

எனக்கு முன்பு விஜய் சேதுபதி பேசும்போது என்னைப் பற்றி அவர் பேசியதால் நான் அவரைப் பற்றி பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். விஜய் சேதுபதி பேசும்போது நான் அவர் பார்த்த முதல் ஹீரோ நான் என்று சொன்னார். ஆனால் நான் முதன்முதலாக டைரக்ஷன் பண்ணும் படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் அவருடைய படத்தை பார்த்து பலமுறை நினைத்திருக்கிறேன்.

ஏனென்றால் விஜய் சேதுபதி என்னுடைய படத்தில் நடித்தார் என்றால் எனக்கு அந்த படத்தில் பெரிய வேலையை இருக்காது. எல்லா வேலையையும் விஜய் சேதுபதியே பார்த்துவிடுவார் என்று ஜெயம் ரவியும் விஜய் சேதுபதி குறித்து பாராட்டு மழையை பொழிந்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+