Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஓ போடு” ஜெமினியில் நாம பார்த்தது கிளைமாக்ஸ் இல்லையா..? அந்த பிரபலத்தால் மாறிப்போன கதை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த ஜெமினி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்த இந்த படத்தில் வெளிவந்த 'ஓ போடு' பாடல் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆகி இந்த படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.

actor vikram changed climax in gemini movie problem

கேங்ஸ்டர் ஆக இந்த படத்தில் விக்ரம் கலக்கியிருப்பார். அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற ஜெமினி படத்தின் கதை மற்றும் கிளைமாக்ஸ் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

காதல் மன்னன்,அமர்க்களம், என்று அஜித்தை வைத்து மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சரணுக்கு 2002 ஆண்டு விக்ரமை வைத்து ஜெமினி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது ஏவிஎம் நிறுவனம்.சரண் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தாலும் ஏ வி எம் நிறுவனம் சரண் சொன்ன ஜெமினி பட ஒரிஜினல் முழு கதையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டாம் பாதி துவங்கி கிளைமாக்ஸ் வரை கதைகளில் சில மாற்றங்களை மாற்றச் சொல்லி இருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர். சரண் முதலில் கூறிய கதைப்படி ஜெமினி படத்தில் விக்கிரமுக்கு ஆதரவாக இருக்கும் காவல் அதிகாரியாக கமிஷனர் சிங்கப்பெருமாள் வேடத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் முரளி கதாபாத்திரம் கிளைமாக்ஸில் அந்த காவல் அதிகாரியே வில்லனாக மாறி விக்ரமுக்கு எதிராக திரும்புவதாக கதையை வடிவமைத்திருந்தார்.

ஆரம்பத்திலிருந்து நல்லவராக காட்டிவிட்டு இறுதியில் அவரை வில்லன் போல் காட்டுவதை விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அந்தக் கதாபாத்திரத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லியும், இது குறித்து பிரபல கதாசிரியர் பீட்டர் செல்வகுமார் இடம் கொஞ்சம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள் என்றும் இயக்குனர் சரணிடம் கூறியுள்ளனர்.

actor vikram changed climax in gemini movie problem

பீட்டர் செல்வகுமார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மூன்று முகம் உட்பட பல படங்களுக்கு கதாசிரியராக இருந்துள்ளார். அவரிடம் திரைக்கதை மாற்றத்தை குறித்து பேச இயக்குனர் சரனிடம் கூறியுள்ளனர். இரு மனதுடன் பீட்டர் செல்வகுமாரிடம் சென்ற இயக்குனர் சரண் கதை மற்றும் அதை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பேசி உள்ளார்.

ஜெமினி படத்தின் சரணின் ஒரிஜினல் கதையை கேட்ட பீட்டர் செல்வகுமார், நீங்கள் மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் முட்டாள் ஆக்கினால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளார்.பீட்டர் செல்வகுமார் உடன் கலந்தாலோசித்த பின்பு திரைக்கதைகள் ஏற்பட்ட மாற்றம் தான் மலையாள நடிகர் முரளி நடித்த சிங்கப்பெருமாள் கதாபாத்திரம் கதைப்படி வேறு துறைக்கு மாறுதலாகி அந்த பதவிக்கு வினு சக்கரவர்த்தி புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டு கதாநாயகனுக்கு எதிராக மாறும் வில்லனாக காட்டப்பட்டிருப்பார்.

மக்களும் ஜெமினி படத்தில் இந்த கிளைமேக்ஸை அங்கீகரித்ததால்தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற தகவல் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+