என் பொண்ணு மாரிமுத்து தாத்தாவை பார்க்கணும்னு கேட்குறா.. தியேட்டரில் கூட.. நடிகர் விமல் எமோஷனல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவர் இருந்து சில வாரங்கள் கடந்து விட்டாலும் அவரை மறக்க முடியாமல் பல தவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரோடு நெருங்கி பழகியவர்களும், அவருடைய உறவினர்களும் தொடர்ச்சியாக அவரைப் பற்றி பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மாரிமுத்து இயக்கிய திரைப்படத்தில் நடித்த நடிகர் விமல் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த வகையில் நடிகர் மாரிமுத்துவுக்கு நிகர் அவர் மட்டும்தான். அவருடைய இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது என்று அதிகமான ரசிகர்களும், பிரபலங்களும் கூறி வருகின்றனர். அதுபோலத்தான் நடிகர் விமலும் கூறியிருக்கிறார். நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளையும், போராட்டங்களையும் தாண்டி வந்தவர்.
மாரிமுத்து போன்ற ஒரு வைராக்கியமானவரை நான் பார்த்ததில்லை பல நாட்கள் சாப்பாடு இல்லாமல் பசியால் இருந்தாலும் தண்ணீர் குடித்து இருக்கிறார். அதுபோல அவருடைய கேரக்டரும் யாருக்கும் வரவே செய்யாது. எனக்கு மனது சரியில்லாமல் இருந்தால் நான் அவரிடம் போன் செய்து பேசினாலே போதும் நம்முடைய மனம் தெளிவடைய வைத்து விடுவார்.
பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு என்னிடம் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட சொன்னார், எதிர்நீச்சல் என்கிற ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கு அது சரியா வருமான்னு தெரியவில்லை என்று, ஆனால் பிறகு சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னிடம் பலமுறை பெருமையாக பேசி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மனதிலும் மாரிமுத்து சார் இடம் பிடித்திருந்தார். என்னுடைய குழந்தைக்கு மூனேகால் வயது தான் ஆகிறது. அவர் திண்டுக்கல்லில் என்னுடைய மனைவியோடு இருக்கிறார். அப்போது ஜெயிலர் திரைப்படம் பார்க்க குடும்பத்தோடு போயிருந்திருக்கின்றனர். அங்கே தியேட்டரில் படம் பார்க்கும்போது என்னுடைய மகள் அம்மா பாருங்க "எதிர்நீச்சல் சீரியல் தாத்தா" இங்க இருக்காரு என்று சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு 3 வயது குழந்தையின் மனதிலும் மாரிமுத்து சார் இடம்பிடித்து இருந்தார்.
சென்னைக்கு என் குழந்தையை கூட்டிட்டு நான் வரும்போது அவரை சந்திக்க வைங்க என்று என்னுடைய மனைவி சொல்லி இருந்தார். நானும் என்னுடைய குழந்தையை கூட்டிட்டு வந்து அவரை சந்திக்க வைக்க வேண்டும் என்று இருந்தேன். என்னுடைய குழந்தை பல விஷயங்களை அவரிடம் பேச வேண்டும் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதுவெல்லாம் நடக்காமல் போய்விட்டது என்று தன்னுடைய வருத்தத்தை நடிகர் விமல் கண்ணீரோடு பகிர்ந்து இருக்கிறார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications