Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது.. அதிர்ச்சி கொடுத்த ஆலியா.. கணவர் மீது பல குற்றசாட்டு

நடிகை ஆலியா மானசா தன்னுடைய கணவரிடம் தனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்துவிட்டது என்று கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடிகை ஆலியா மானசா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்க்கு தன்னை பார்க்க வந்த கணவரிடம் ஆலியா மானசா பேசிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தனக்கு சீரியலில் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது என்று கணவர் சஞ்சீவ்வை ஆலியா மானசா அண்ணா என்று அழைத்து சஞ்சீவிற்கு கோபம் வர வைத்திருக்கிறார்.

 இப்போ ரியல் ஜோடி

இப்போ ரியல் ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக அறிமுகமாகி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய ஆலியா மனசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் தற்போதும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சஞ்சீவ் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகை ஆலியா மானசா இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஜா ராணி செம்பா

ராஜா ராணி செம்பா

நடிகை ஆலியா மானசா ராஜா ராணி சீரியல் செம்பா கேரக்டரில் இளைஞர்களின் மனசின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இந்த மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்கள் தவம் கிடந்தனர். அந்த அளவிற்கு ஆலியா மானசா தன்னுடைய செல்லமான சிரிப்பினால் இளைஞர்களை வசியப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் கதாநாயகனை திருமணம் செய்து விட்டார் என்ற செய்தி கேட்டு அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வந்தனர்.. திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் தன்னுடைய விடாமுயற்சியினால் பழைய செம்பாவாக மாறி இருக்கிறார்.

சமீபத்தில் திருமணம்

சமீபத்தில் திருமணம்

இந்த நிலையில் சன் டிவியில் மீண்டும் இனியா சீரியலில் ஆலியா கதாநாயகியாக நடிக்க, இவருக்காகவே இவருடைய ரசிகர்கள் அதிகமானோர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தற்போது வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த சீரியலில் இனியாவிற்கு கதாநாயகனோடு திருமணம் முடிந்தது. அது மட்டுமல்லாமல் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஆலியா மானசாவின் கணவரே இனியாவின் திருமணத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்து பிரமோவும் வெளியிட்டு இருந்தார். அது நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஆலியா மானசா தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

என்னம்மா இப்படி பண்ணலாமா

என்னம்மா இப்படி பண்ணலாமா

அதில் இனியா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிருக்கு சஞ்சீவ் வந்து ஆலியாவிற்க்கு ஹாய் சொல்ல, ஆலியா ஹாய் அண்ணா என்று சொல்கிறார். எனது "அண்ணனா...?" அப்படி சொல்லாதீங்க என்று பதறியப்படியே சஞ்சீவ் கேட்க, எனக்கு சீரியலில் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது அதனால் அப்படித்தானே சொல்ல முடியும் என்று ஆலியா சொன்னதும் அதைக்கேட்டு அவருடைய கணவர் சஞ்சீவ் அதிர்ச்சி அடைகிறார். அது மட்டும் அல்லாமல் மீண்டும் அவர் நான் சூட்டிங் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது, வீட்டிற்கு வந்தால் ஒன்று தூங்குறீங்க, இல்லன்னா சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டா வர்றீங்க, இல்லன்னா கிரிக்கெட் விளையாட போயிடுறீங்க. நான் எப்போ உங்களை பார்க்கிறது என்று சஞ்சீவ் மீது அடுக்கடுக்கான குற்ற சாற்றுகளை வைக்கிறார். தற்போது இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+