ஆலியா மானசா 3வது முறை கர்ப்பமா? சஞ்சீவ் வெளியிட்ட போஸ்ட்.. ஆனால் கேப்ஷனில் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்த கேள்விதான் இப்போது இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. அதில் இருவரும், "நாங்கள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை சொல்லப் போகிறோம்... உங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவை.." என்று கூறியிருக்கிறார்கள்.
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ரீல் கணவன் மனைவியாக நடித்து ரியலாகவும் காதலித்து திருமணம் செய்து தம்பதிகளாக மாறிவிட்டனர்.

ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் ஆலியா நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருந்தனர். சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகைக்கு இருப்பது போன்று அதிகமான ரசிகர்கள் இருந்ததாலே இவருக்கு இணையத்தில் அதிகமான ஃபேன்ஸ் பாலோவர்ஸ் மற்றும் ஃபேன்ஸ் பேஜ்களும் இருக்கிறது.
ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்த ஆலியா மானசா இரண்டாவது பாகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது முதல் குழந்தைக்கு அம்மாவாக மாறி இருந்தார். இதனால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆனாலும் கர்ப்பமான முதல் நாளிலிருந்து 9 மாதம் வரைக்கும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

முதல் பெண் குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு சில மாதங்களில் கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடி இருந்ததையும் குறைத்து மீண்டும் கதாநாயகியாக சீரியலில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த முறை விஜய் டிவியில் நடிக்காமல் சன் டிவியில் இனியா சீரியல் கதாநாயகியாக மாறி இருந்தார்.
இந்த சீரியலும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு அந்த பதிவில், "இன்றைக்கு ஒரு பெரிய நாள்... உங்களுடைய ஆசிர்வாதங்கள் எல்லாம் எங்களுக்கு வேணும்.. குட் நியூஸ் சீக்கிரமாக சொல்லப் போகிறோம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு அதிகமான ரசிகர்கள் ஆலியா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்விகள் குவிந்து வருகிறது. ஆனால் அது குறித்து எந்த தகவலையும் ஆலியா உறுதியாக கூறவில்லை. இதனால் ஒருவேளை ஆலியா புது ப்ராஜெக்ட் கமிட் ஆகி இருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications