Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரிமுத்துவின் ஆத்மா எதிர்நீச்சல் செட்டில்.. "ஈ” வடிவில் நடிகர் பின்னாடி சுற்றுது! நடிகை சொன்ன பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். அவர் இறந்த பிறகு அவருடைய ஆத்மா இன்னும் அதே செட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் பேசியிருக்கிறார். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து திடீரென காலமானார். அவர் பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இயக்குனராக வேண்டும் என்று கனவோடு சென்னைக்கு வந்த மாரிமுத்து உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி பிறகுதான் நடிகராக வாய்ப்பு கிடைத்தது. அதுபோல இயக்குனராகவும் புலிவால் உட்பட சில திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

Marimuthu Ethirneechal serial suntv

எதிர்நீச்சல் சீரியல் வில்லன்

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் அறிமுகமானார். அந்த சீரியல் அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு போனது. எதிர்நீச்சல் குணசேகரன் ஆக அனைவரையும் வியக்க வைத்தார். இவர் நல்லவரா? கெட்டவரா? என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இவருக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். "எம்மா ஏய்" என்று அவர் சொன்ன வசனம் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

மாரிமுத்து பற்றிய சர்ச்சை

எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு வந்தார். அதுபோலத்தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜாதகத்தை நம்புபவர்கள் மற்றும் நம்பாதவர்கள் கலந்து கொண்டு விவாதித்த போது ஜாதகம் பொய், அதுவெல்லாம் கட்டுக்கதை என்ற அணி சார்பாக பேசி இருந்தார். அப்போது அது பெரிய அளவில் விமர்சனமானது. அடுத்த சில மாதங்களிலேயே சூட்டிங் முடித்துவிட்டு டப்பிங் பேசுவதற்காக சென்ற இடத்தில் நெஞ்சுவலி ஏற்பட தானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போன மாரிமுத்து அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகர் மாரிமுத்து மரணம்

இந்த செய்தி அந்த நேரத்தில் பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்தது. சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளி தரை பிரபலங்கள் ,ரசிகர்கள் என அனைவருமே தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்துள்ளனர். எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு தூணாக இருந்த மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு நடிகர் வேலராமமூர்த்தி அந்த கேரக்டரில் நடிக்க தொடங்கி இருந்தார். வேலராமமூர்த்தி உடன் ஏற்கனவே சில திரைப்படங்களிலும் மாரிமுத்து நடித்திருந்தார். ஆனாலும் எதிர்நீசசல் சீரியலில் முதல் பாகம் முடிவடைந்ததுமா இரண்டாவது பாகத்திலும் வேலராமமூர்த்தி குணசேகரனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எதிர்நீச்சல் அறிவுக்கரசி

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது எதிர்நீச்சல் சீரியல் செட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது நடிகர் மாரிமுத்துவின் ஆத்மா இன்னும் எதிர்நீச்சல் செட்டில் தான் இருக்கிறது என்று பேசி இருக்கிறார்‌. அதாவது நான் சீரியலில் இப்போதுதான் நடிக்க தொடங்கி இருக்கிறேன் ஆனால் நான் பார்த்த வரைக்கும் எதிர்நீச்சல் செட்டில் மாரிமுத்துவின் ஆத்மா இருக்கிறது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Marimuthu Ethirneechal serial suntv

எதிர்நீச்சல் நடிகை பேட்டி

அவர் ஈ வடிவத்தில் தான் எதிர்நீச்சல் செட்டில் இருக்கிறார். அதாவது இந்த சீரியலில் நடிகர் வேலராமமூர்த்தி சூட்டிங் வரும்போது எல்லாம் அவரை ஒரு ஈ சுற்றிக்கொண்டே இருக்கும். அவர் சில நேரங்களில் அதை விரட்டி விடும் போது டேக் எல்லாம் வாங்கி இருக்கிறார். வேறு யாரிடமும் அந்த ஈ போகாது அவர் ஒருவரை மட்டுமே அது சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் இது மாரிமுத்து சார் ஆத்மா தான் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என அந்த நடிகை பேசியிருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+