மாஸாக மாரி சீரியலில் என்ட்ரி கொடுத்த தேவயானி.. பரபரப்பான கட்டத்தில் கதை திருப்பம்
சென்னை: நடிகை தேவயானி ஜீ தமிழில் மாரி சீரியலில் முத்து பேச்சியாக அறிமுகமாகிறார்.
முத்து பேச்சி அறிமுகத்தால் இனி சீரியலில் பல பரபரப்பான தருணங்கள் நடைபெற இருக்கிறது.
இனி மாரியை அழிக்க நினைப்பவர்களுக்கு இனி தான் ஆபத்து வர இருக்கிறதாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் இன்றைய எபிசோட்டில் சூர்யா ஜாஸ்மின் டீமை வீட்டை விட்டு துரத்திய நிலையில் ஹாசினி இவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார். பிறகு மாரி சூர்யாவிடம் பேசி மீண்டும் வீட்டிற்குள் வர அனுமதி வாங்குகிறார்.

அதைத் தொடர்ந்து சமயபுரத்தில் மாரி தாத்தா நீலகண்டன் மற்றும் அவளது பெரியப்பா இருக்க, அப்போது வரும் ஊர் மக்கள் கோவில் திருவிழாவில் மாரிக்கு முதல் மரியாதை கொடுக்கப் போவதாக சொல்ல இதைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதற்கு அடுத்ததாக சகுந்தலா வீட்டுக்கு செல்லும் ஊர் பெரியவர்கள் திருவிழா பற்றி பேச வழக்கம்போல முதல் மரியாதை எனக்கு தானே என்று சொல்ல, இந்த முறை மாரிக்கு கொடுக்க வேண்டும் என ஊர் மக்கள் முடிவெடுத்து இருப்பதாக சொல்ல சகுந்தலா அதிர்ச்சி அடைகிறார்.
இதனால் கோபத்தில் இருக்கும் சகுந்தலா மாரி இந்த ஊருக்குள் எப்படி வர்றான்னு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார். இதை அடுத்து மாரியின் பெரியம்மா போன் செய்து உனக்கு முதல் மரியாதை கொடுக்க போறாங்களாம் என சொல்ல மாரி சந்தோஷமடைகிறாள்.
மேலும் சூர்யாவையும் திருவிழாவுக்கு கூப்பிட தாரா அம்மா இல்லாத நேரம் நான் வந்தா தப்பாகிடும் நீ மட்டும் போயிட்டு வா என சொல்ல, அதற்கு மாறி நீங்க வராம நானும் போக மாட்டேன் என்று சொல்கிறார். இதனால் இந்த விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தாரா இதை சொன்னா கூட போக கூடாதுன்னு தான் சொல்லுவா என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.
பிறகு சகுந்தலா தாராவுக்கு போன் செய்து மாரி மட்டும் இந்த ஊருக்கு வந்தா அவளை நான் ஏதாவது பண்ணிடுவேன் என்று சொல்ல தாரா யோசித்தபடியே போனை வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து முத்து பேச்சியாக தேவயானி மாஸாக ஜிப்பில் வந்து இறங்கி சாமி போட்டோ முன்பு நின்று உன் கோவிலை எப்ப திறக்கப் போறோம். உனக்கு எப்ப கும்பாபிஷேகம் செய்யப் போறேன் என வேண்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனி வரும் எபிசோட்டில் தெரியவரும்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications