மாஸாக மாரி சீரியலில் என்ட்ரி கொடுத்த தேவயானி.. பரபரப்பான கட்டத்தில் கதை திருப்பம்
சென்னை: நடிகை தேவயானி ஜீ தமிழில் மாரி சீரியலில் முத்து பேச்சியாக அறிமுகமாகிறார்.
முத்து பேச்சி அறிமுகத்தால் இனி சீரியலில் பல பரபரப்பான தருணங்கள் நடைபெற இருக்கிறது.
இனி மாரியை அழிக்க நினைப்பவர்களுக்கு இனி தான் ஆபத்து வர இருக்கிறதாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் இன்றைய எபிசோட்டில் சூர்யா ஜாஸ்மின் டீமை வீட்டை விட்டு துரத்திய நிலையில் ஹாசினி இவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார். பிறகு மாரி சூர்யாவிடம் பேசி மீண்டும் வீட்டிற்குள் வர அனுமதி வாங்குகிறார்.

அதைத் தொடர்ந்து சமயபுரத்தில் மாரி தாத்தா நீலகண்டன் மற்றும் அவளது பெரியப்பா இருக்க, அப்போது வரும் ஊர் மக்கள் கோவில் திருவிழாவில் மாரிக்கு முதல் மரியாதை கொடுக்கப் போவதாக சொல்ல இதைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதற்கு அடுத்ததாக சகுந்தலா வீட்டுக்கு செல்லும் ஊர் பெரியவர்கள் திருவிழா பற்றி பேச வழக்கம்போல முதல் மரியாதை எனக்கு தானே என்று சொல்ல, இந்த முறை மாரிக்கு கொடுக்க வேண்டும் என ஊர் மக்கள் முடிவெடுத்து இருப்பதாக சொல்ல சகுந்தலா அதிர்ச்சி அடைகிறார்.
இதனால் கோபத்தில் இருக்கும் சகுந்தலா மாரி இந்த ஊருக்குள் எப்படி வர்றான்னு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார். இதை அடுத்து மாரியின் பெரியம்மா போன் செய்து உனக்கு முதல் மரியாதை கொடுக்க போறாங்களாம் என சொல்ல மாரி சந்தோஷமடைகிறாள்.
மேலும் சூர்யாவையும் திருவிழாவுக்கு கூப்பிட தாரா அம்மா இல்லாத நேரம் நான் வந்தா தப்பாகிடும் நீ மட்டும் போயிட்டு வா என சொல்ல, அதற்கு மாறி நீங்க வராம நானும் போக மாட்டேன் என்று சொல்கிறார். இதனால் இந்த விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தாரா இதை சொன்னா கூட போக கூடாதுன்னு தான் சொல்லுவா என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.
பிறகு சகுந்தலா தாராவுக்கு போன் செய்து மாரி மட்டும் இந்த ஊருக்கு வந்தா அவளை நான் ஏதாவது பண்ணிடுவேன் என்று சொல்ல தாரா யோசித்தபடியே போனை வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து முத்து பேச்சியாக தேவயானி மாஸாக ஜிப்பில் வந்து இறங்கி சாமி போட்டோ முன்பு நின்று உன் கோவிலை எப்ப திறக்கப் போறோம். உனக்கு எப்ப கும்பாபிஷேகம் செய்யப் போறேன் என வேண்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனி வரும் எபிசோட்டில் தெரியவரும்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications